தமிழகத்தில் 'எய்ம்ஸ்' எங்கே அமைய உள்ளது.. உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
தமிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை எங்கே அமையவுள்ளது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பி விரைவில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மதுரை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றக் கிளை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அதில், தமிழகத்தில் 'எய்ம்ஸ் ' மருத்துவமனை எங்கே அமையவுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை செயலர், எய்ம்ஸ் இயக்குனர், தமிழக தலைமை, சுகாதாரத்துறைச் செயலர் ஆகியோர் ஜூலை 12க்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு வழக்கை, ஒத்திவைத்தது.

இது தொடர்பாக மதுரை பழைய மாகாளிப்பட்டியைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்," 15 தென் மாவட்டங்களுக்கு மையப்பகுதியாக விளங்கும் மதுரையில் தற்போது உயர்தர மருத்துவ வசதிகள் இல்லை. இதனால் தென் மாவட்ட மக்கள் தரமான சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் 15 மாவட்ட மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும்.
இதனால், அண்டை மாநிலமான கேரள மக்களும் பலனடைவர். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைக்கப்படும் என்பதை மத்திய அரசு இன்னும் அறிவிக்காமல் உள்ளதால் தமிழகத்தில பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இப்போராட்டங்கள் தொடர்ந்தால் ஒற்றுமை, நல்லிணக்கம் குலையும். இதனால் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமையும் என்பதை வெளிப்படையாக அறிவிக்கக் கோரி மத்திய அரசுக்கு 10.5.2017-ல் மின்னஞ்சலில் கடிதம் அனுப்பினேன். இதுவரை அறிவிக்கவில்லை.
எனவே தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய சுகாதாரத்துறை செயலர், எய்ம்ஸ் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இதன்மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றம் , தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமையவுள்ளது என்பதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதற்கான நோட்டிஸை, மத்திய சுகாதாரத்துறை செயலர், எய்ம்ஸ் இயக்குனர், தமிழக தலைமை, சுகாதாரத்துறைச் செயலர் ஆகியோருக்கு அனுப்பி, ஜூலை 12க்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications