For Daily Alerts
Just In
குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் : தேர்தல் ஆணையம்
குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை: குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குற்றப்பின்னணி உடையவர்கள் வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் இன்று பதில் மனுத்தாக்கள் செய்துள்ளது.
அதில் குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் போட்டியிட தடை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைகளை வழங்கி உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
வாழ்நாள் தடை விதித்தால் மட்டும் தான் அரசியலில் இருந்து குற்றச்செயல்களை குறைக்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் தனது மனுவில் தெரிவித்துள்ளது.
Comments
English summary
The Election Commission has said in supreme court that those who have criminal charges may have a lifetime ban to contest the election.
Story first published: Wednesday, November 1, 2017, 14:01 [IST]