தமிழ்நாடு "வான்ட்ஸ் டூ நோ"... ஜெ.வின் வீடு அரசிடமா, வாரிசுகளிடமா, சசி குடும்பத்திடமா?
Recommended Video

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அரசு கையகப்படுத்திவிட்டது, வாரிசுகள் வழக்கு போட்டிருக்கிறார்கள், சசிகலா குடும்பத்தினர் நிர்வகித்துவருகிறார்கள் இப்படி பல தகவல் வெளியாகிவருகிறது.
அதிகாரிகளிடம் பேசியபோது, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடமையாக்கும் பணியை அரசு தொடங்கிவிட்டது. இதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் இணைப்பிற்கு பிறகு வெளியிட்டார். இதுதொடர்பாக அரசு ஆணை வெளியிடப்பட்டது. ஆனால் அரசுடைமை ஆக்கும் முயற்சி இன்னும் முழுமையடையவில்லை.
ஒரு தனியார் சொத்தை, கையகப்படுத்தி, அரசுடைமையாக்கவேண்டுமானால், அச்சொத்தின் வாரிசுதாரர்களிடம் முறையான அனுமதிபெறவேண்டும். தேவைப்பட்டால், நீதிமன்ற அனுமதிபெற்று சொத்தை அரசின்பெயரில் பதிவு செய்யப்படவேண்டும். பிறகு தனியார் சொத்து வருவாய்த்துறையால் கையகப்படுத்தப்படும், பிறகு பராமரிப்பு மற்றும் நிர்வாகத்திற்கான பொதுப்பணித்துறையிடன் ஒப்படைக்கப்படும். பாதுகாப்பை உறுதி செய்தபிறகு அரசுடைமையாக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும்.

அறிவிப்பு வெளியிட்ட அரசு
ஆனால், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசு உடைமையாக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டாலும், இன்னும் இந்த பணிகள் முடிவுக்கு வரவில்லை. இதனால் இன்னும் அரசு கையகப்படுத்தவில்லை.

முழுமையடையவில்லை
வாரிசுகளாக கருதப்படும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபாவுக்கு வேதா இல்லத்தில் உரிமை உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இருவரும் வாரிசுகள் என்பதை உரிமைகோர வருவாய்த்துறையினரிடம் இருந்து வாரிசு சான்றிதழ் பெறவேண்டும். நீதிமன்றம் சென்று வாரிசு சான்றிதழ் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இவர்களின் முயற்சியும் முழுமையடையவில்லை.

சசி குடும்ப கட்டுப்பாட்டிலேயே
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதும், அவரின் மறைவுக்குப்பிறகும் வேதா இல்லம் தொடர்ந்து சசிகலா வசித்துவந்தார், நிர்வகித்துவந்தார். சசிகலா சிறை சென்ற பிறகு, சசிகலா சார்பில் இளவரசியின் மகன் விவேக் நிர்வகித்து வருகிறார். வேதா இல்லத்திற்கான வரி செலுத்துதல், மின்கட்டணம் செலுத்துதல் என அடிப்படையான பராமரிப்புகளை விவேக் மற்றும் குடும்பத்தார் கவனித்துவருகிறார்கள். எனவே, வேதா இல்லம் இதுவரைக்கும் சசிகலாவின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

சோதனைக்கு ஆணை தேவையில்லை
தனியார் கட்டுபாட்டில் உள்ள சந்தேகத்திற்குரிய இடத்தில் சோதனையிட வருமானவரித்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது என்கிறார்கள் அதிகாரிகள். வேதா இல்லம் யாருடையது என்ற கேள்விக்கு நீதிமன்றம்தான் பதில் செல்லவேண்டும். ஆனால், அதிகாரிகள் சோதனை நடத்த நீதிமன்ற ஆணை தேவையில்லை என்பதே நிதர்சனம்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications