உள்ளாட்சித் தேர்தல்: 12 மாநகராட்சிகளில் யார் கொடி பறக்கும்? சீக்ரெட் சர்வே நடத்திய அதிமுக
சென்னை: உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் சம பலத்துடன் எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. 12 மாநகராட்சிகளிலும் யார் கொடி பறப்பது என்பதுதான் திமுக, அதிமுக இடையே இப்போதயை கவுரவப் பிரச்சினையாக உள்ளது. எந்த மாநகராட்சி யாருக்கு சாதகம் என்று அதிமுக சர்வே எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிட்ட நிலையில் ஆளும் அதிமுக தனது வேட்ளாளர்கள் பட்டியலை தயார் செய்துவிட்டதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

12 மாநகராட்சிகள்
சென்னை, மதுரை, கோவை,திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு,வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர் என 12 மாநகராட்சிகளிலும் வெற்றி யாருக்கு கனியும் என்று ரகசிய சர்வே நடத்தியிருக்கிறதாம் அதிமுக. இதில் சென்னையும், திருச்சியும் கனிவது கடும் சிரமம் என்று சர்வே டீமுக்கு தெரிவந்திருக்கிறதாம்.

வெற்றிக்கொடி
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் அதிமுகவின் கொடி பறப்பது உறுதி என்பது தெரியவந்துள்ளது. அதேபோல சேலத்திலும் வெற்றி உறுதிதான் என்பது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறதாம். தஞ்சையில் காவிரி தண்ணீர் ஜெயிக்க வைத்து விடும் என்றும் மதுரையிலும் அதிமுகவின் செல்வாக்கு குறையவில்லை என்றும் தெரியவந்துள்ளதாம்.

சிக்கலான மாநகராட்சிகள்
தூத்துக்குடி, திண்டுக்கல், வேலூர், நெல்லை மாநகராட்சிகளில் ஆளுங்கட்சி சற்று பலவீனமாகவே இருக்கிறதாகவும், சர்வே ரிப்போர்ட் கூறுகிறதாம்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை இன்னும் சில தினங்களுக்குள் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பாளர் பட்டியல் தயார்?
இந்நிலையில் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் ஊராட்சி ஒன்றிய வார்டு, மாவட்ட கவுன்சிலர் வார்டு, மாநகர கவுன்சிலர் வரையில் ஒவ்வொரு பதவிக்கும் இரண்டு வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்து விட்டார்களாம். அதை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் மூலமாக அதிமுக தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நம்பிக்கைதானே வாழ்க்கை
உள்ளாட்சி அமைப்புகளைக் கொத்தாகக் கைப்பற்ற கவுன்சிலர்கள் மூலம் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் தேர்தல் முறையை கொண்டு வந்துள்ளது. தேர்தல் அறிவித்த சில நாட்களிலே வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அனைத்து நகராட்சியிலும், ஒன்றியத்திலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் அதிமுக பிரமுகர்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications