பிக்பாஸ்.. கமல் சூசகமாக சொல்லும் ‘அந்த’ 2 பேர்!
பிக்பாஸ் சீசன் 2 வரும் 17ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
Recommended Video
சென்னை: மக்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 2 வரும் 17ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பேமஸ் ஆனது. கமல் இதனை தொகுத்து வழங்கி இருந்தார். அதில் கலந்து கொண்ட ஓவியா, பரணி, ஆரவ், காயத்ரி, சக்தி, ஜூலி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பிரபலமானார்கள்.
சிலர் நல்லவர்களாக மக்களின் பாராட்டுகளையும், ஆதரவையும் பெற்றனர். வேறு சிலரோ மக்களின் எதிர்ப்பை பெற்று, திட்டுகளை வாங்கிக் கட்டிக் கொண்டனர்.
மீண்டும் பிக்பாஸ்:
இந்நிலையில், வரும் 17ம் பிக்பாஸ் சீசன் 2 விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. முதல் சீசனைப் போன்று இதனையும் கமலே தொகுத்து வழங்குகிறார். தற்போது இந்த நிகழ்ச்சி தொடர்பான புரோமோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
பரம ரகசியம்:
பிக்பாஸ் சீசன் 2வில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் புரோமோக்களில் விதவிதமாக பரபரப்பைக் கூட்டி வருகின்றனர்.
யார் யார்..?
அந்தவகையில் தற்போது ஒளிபரப்பாகும் புதிய புரோமோவில், கையில் போனை வைத்தபடி கமல் பேசுகிறார். ஆரம்பத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் மூன்று பற்றி இந்த விளம்பரத்தில் கமல் பேசினார். பின்னர் என்ன காரணத்தினாலோ அதனை எடிட் செய்து இப்போது இருவர் பற்றி மட்டும் அவர் பேசுகிறார்.
|
ஜூலி:
அதில், அவர் பேசும் முதல் நபர் பிரச்சினைகளை உருவாக்கி கச்சேரியைக் கலை கட்ட வைப்பவர், இரண்டாமவர் ஏதோ நடிகை மற்றும் மூன்றாவது நபர் காமெடி நடிகர் என்பது தெரிகிறது. முந்தைய சீசனில் ஓவியா, காயத்ரி, சக்தி, ஜூலி போன்றோர் அதிகப் பிரச்சினைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினர். வீட்டில் இருப்பவர்களை சிரிக்க வைக்க வையாபுரி பயன்பட்டார்.
சிரிப்பிலே சேதி:
இதே பார்முலாவை இந்த சீசனிலும் பயன்படுத்துகிறார்கள் போல. அப்படியானால் இம்முறையும் கட்சியைச் சேர்ந்தவர்கள், திரைத்துறையில் இருப்பவர்கள் என கலந்து கொள்ளப் போகிறவர்கள் கலவையாக இருக்கப் போகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக காமெடியன் ஒருவரும் இருக்கிறார் என்பது கமலின் சிரிப்பிலேயே தெரிகிறது.
அரசியல் பேச்சு:
இது ஒருபுறம் இருக்க, சென்ற ஆண்டு ஷோவில் அங்கங்கே அரசியல் பேசிய கமல், 'மக்கள் நீதி மய்ய'த் தலைவரான பின், பிக்பாஸ் சீசன் 2ல் கலந்துகொள்வதால், இந்தாண்டு எக்ஸ்ட்ராவாக எகிறி அடிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படியோ வரும் 17ம் தேதி முதல் அடுத்த 100 நாட்களுக்கு இரவு 9 மணியானால், அனைவரும் டிவி முன் ஆஜராகப் போகின்றனர் என்பது என்னவோ மறுக்க முடியாத உண்மை.