ஜெ.வும் குற்றவாளின்னு சொல்லிட்டாங்களே.. பிறகு ஏன் அதிமுகவினர் கொண்டாடுகின்றனர்???
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை அதிமுகவினர் அதாவது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கொண்டாடுவது மக்களை வியப்புக்குள்ளாக்கியுள்ளது. காரணம், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஜெயலலிதாவும் கூட குற்றவாளிதான்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாதான் முக்கியக் குற்றவாளி. அடுத்த நிலையில்தான் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உள்ளனர். தற்போது ஜெயலலிதா மறைந்து விட்டார்.
இருப்பினும் இன்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின்படி நான்கு பேருமே குற்றவாளிகள்தான். நான்கு பேருக்கும் விதிக்கபப்ட்ட அபராதத்தையும் ஒரு பைசா கூட குறைக்காமல் உறுதி செய்துள்ளது சுப்ரீம் கோர்ட்.

ஜெயலலிதாவும் குற்றவாளியே
அந்த வகையில் ஜெயலலிதாவும் கூட குற்றவாளிதான். அவர் செய்தது குற்றம்தான் என்பதே இந்த தீர்ப்பின் முக்கிய சாராம்சம். ஆனால் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடி வருகின்றனர்.

குத்தாட்டம் பட்டாசு லட்டு!
> பட்டாசு வெடிக்கின்றனர். குத்தாட்டம் போடுகின்றனர். லட்டு கூட கொடுத்து சந்தோஷிக்கின்றனர். இவர்கள் அடிப்படை விஷயத்தையே மறந்து விட்டனர்.

கோபம் முழுவதும் சசி மீதே
தங்களது தலைவராக திகழ்ந்த ஜெயலலிதாவும் குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்ததை அவர்கள் மறந்து விட்டனர். அவர்களது முக்கிய சந்தோஷமே, சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளார் என்பதாக மட்டுமே உள்ளது. இதைத்தான் அவர்கள் முக்கியமாக கருதுவதாக தெரிகிறது.
|
ஆச்சரியம்தான்
அதேசமயம், ஜெயலலிதாவும் குற்றவாளி என்பதும் இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சம் என்பதை அவர்கள் மறந்து விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவது ஆச்சரியம்தான்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications