தனியார் பேருந்துகள் லாபம் ஈட்டும் போது அரசுக்கு நஷ்டம் ஏன்.. தமிழிசை கேள்வி

தனியார் பேருந்துகள் லாபம் ஈட்டும் போது அரசுக்கு நஷ்டம் ஏன் என தமிழிசை கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் பேருந்துகள் அனைத்தும் நன்றாக லாபம் ஈட்டும் போது அரசுக்கு மட்டும் நஷ்டம் ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தமிழகம் முழுக்க போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. போக்குவரத்து ஊழியர்களின் இந்த போராட்டம் 5வது இன்றும் நாளாக தொடர்கிறது.

Why TN transport corporation runs in loss? - Tamilisai Soundararajan

இந்த போராட்டம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ''தனியார் பேருந்துகள் அனைத்தும் நன்றாகவே லாபம் ஈட்டுகிறது. எந்த தனியார் நிறுவனமும் நஷ்டத்தில் இயங்கவில்லை. ஆனால் தமிழக அரசின் போக்குவரத்து கழகத்திற்கு மட்டும் நஷ்டம் ஏன்?'' என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும் ''வெறும் 4 பேருந்துகள் வைத்திருக்கும் தனியார் முதலாளிகள் எளிதாக லாபம் ஈட்டுகின்றனர். ஆனால் 40,000 க்கு மேல் பேருந்துகளை இயக்கும் அரசு நஷ்டம் என கூறலாமா?. தமிழக அரசு நஷ்டம் என்று கூறி அப்பாவி தொழிலார்களை வஞ்சிக்கிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+