திருவாரூர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன்.. அழகிரி பரபரப்பு பேட்டி!
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிப்பேன் என்று மு.க அழகிரி பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிப்பேன் என்று மு.க அழகிரி பேட்டியளித்துள்ளார்.
திருவாரூர் தேர்தலில் நேரடியாக களமிறங்க அழகிரி முடிவெடுத்து இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே பேசி வருகிறார்கள். இந்த நிலையில் மதுரையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார். இதனால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. இதற்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

திருவாரூர் தேர்தல்
அழகிரி மதுரையில் அளித்த பேட்டியில், திருவாரூரில் போட்டியிடுவது குறித்து யோசிக்கலாம். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதுகுறித்து முடிவெடுப்பேன். திருவாரூர் மக்களிடம் பேசி வருகிறேன். திருவாரூர் தேர்தல் அறிவிக்கப்படும் போது என் முடிவை அறிவிப்பேன்.

ஆதரவு அளிப்பார்கள்
திருவாரூரில் போட்டியிட்டால் அனைத்துக் கட்சி தலைவர்களும் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். நான் போட்டியிட்டால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள். எனக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருக்கிறது.

பாஜக இயக்குகிறது
பாஜக என்னை இயக்கவில்லை. அப்படி வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. எனக்கும் பாஜக தலைவர்களுக்கும் எந்த உறவும் இல்லை. நான் திமுகவில் எந்த குழப்பமும் ஏற்படுத்த விரும்பவில்லை.

தனிக்கட்சி எண்ணம்
தலைவர் கருணாநிதியின் வழியை பின்பற்றி நடக்கிறேன். எப்போதும் பின்பற்றுவேன். திமுகதான் என் கட்சி. தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. தேர்தலில் நின்றால் கூட தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் கிடையாது என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications