ஆதிச்சநல்லூரில் மறுஅகழாய்வு செய்ய தயார்.. மத்திய தொல்லியல் துறை பதில்
ஆதிச்சநல்லூரில் மறுஅகழாய்வு பணிகளை மேற்கொள்ள தயார் என்று மத்திய தொல்லியல் துறை தெரிவித்து இருக்கிறது.
மதுரை: ஆதிச்சநல்லூரில் மறுஅகழாய்வு பணிகளை மேற்கொள்ள தயார் என்று மத்திய தொல்லியல் துறை தெரிவித்து இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று காமராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.

சென்ற மாதம் இந்த வழக்கில் இந்த வழக்கில் பதில் தாக்கல் செய்துள்ள மத்திய அரசு ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாய்வு பணிகளை தொடங்கும் திட்டம் இல்லை என்று கூறி இருந்தது. இதனால் தமிழக தொல்லியல் துறை ஆய்வு செய்தால் போதும் என்று கூறி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு புதிய பதில் தாக்கல் செய்து இருக்கிறது. ஆதிச்சநல்லூரில் மறுஅகழாய்வு பணிகளை மேற்கொள்ள தயார் என்றுள்ளது.
மேலும் '' அகழாய்வு பணிகள் செய்ய ஏற்கனவே ஏற்பாடுகள் தொடங்கிவிட்டது. ஒரு மாதத்தில் பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications