சொத்தில் என் பங்கு போனாலும் சகோதரிகளின் பங்கை சட்டப்படி மீட்பேன்: கார்த்திக்
சென்னை: சொத்தில் என் பங்கு கிடைக்காவிட்டாலும் என் சகோதரிகளின் பங்கை சட்டப்படி மீட்டுக் கொடுப்பேன் என்று நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்திக் தனது அண்ணன் கணேசன் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது தந்தை முத்துராமன் வாங்கிய சொத்துக்களில் தனக்கும், தனது 2 சகோதரிகளுக்கும் கிடைக்க வேண்டிய பங்கை தனது அண்ணன் கணேசன் அபகரித்துக் கொண்டதாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கார்த்திக் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் அண்ணன் கணேசன் என் அம்மாவை ஏமாற்றியுள்ளார். அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. இந்நிலையில் அண்ணன் ஆங்கிலத்தில் எழுதிய பத்திரங்களில் அம்மாவிடம் கையெழுத்து வாங்கியுள்ளார். சொத்துப் பத்திரத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியாமலேயே என் அம்மா கையெழுத்து போட்டுள்ளார்.
என் அண்ணன் செய்த காரியத்தால் எனக்கும், எனது 2 சகோதரிகளுக்கும் கிடைக்க வேண்டிய பங்கு கிடைக்காமல் போயுள்ளது. என் சகோதரிகளின் உரிமை மீட்கப்பட வேண்டும். சொத்தில் என் பங்கு கிடைக்காவிட்டாலும் என் சகோதரிகளுக்கு சேர வேண்டிய பங்கை சட்டப்படி மீட்டு அவர்களிடம் அளிப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications