தமிழ்நாடு சட்டசபையில் மற்றொரு அதிரடி? ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானம் நிறைவேற்றமா?
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பல்வேறு மாநிலங்கள் வரவேற்று வருகின்றன. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் கடுமையாக கண்டனங்களுக்கு உள்ளான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானம், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டார். இந்த மசோதாக்களுக்கு தாம் ஒப்புதல் தராததால் அவை செத்துப் போய்விட்டன என கிண்டலடித்தார்.

ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, ஆளுநர் ரவின் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் பெஞ்ச், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை இந்த வழக்கில் வழங்கியது.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஆளுநர்கள் அரசியல்வாதிகளாக செயல்படக் கூடாது; மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும்; மாநில சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தந்தாக வேண்டும் என கறாராக உத்தரவிட்டது. மேலும் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டது, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது ஆகியவை அரசியல் சாசனத்துக்கு எதிரானது; சட்டவிரோதமானது எனவும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
அத்துடன், ஆளுநர் ரவியால் கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுக்கும் தமது சிறப்பு அதிகாரம் மூலம் உச்சநீதிமன்றமே ஒப்புதலும் தந்தது. இதனையடுத்து இந்த 10 மசோதாக்களும் ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக கருதி தமிழ்நாடு அரசின் அரசாணையில் வெளியிடப்பட்டும் விட்டது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இத்தகைய விமர்சனங்களை எதிர்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானம் ஒன்றை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி கூறுகையில்,ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; தமிழ்நாடு ஆளுநர் குறித்து உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் அவர் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பது அரசமைப்புச் சட்டத்தையும், நீதிமன்றத்தையும் அவமதிப்பது மட்டுமல்ல, ஜனநாயகத்துக்குப் பேராபத்தாகும். எனவே, ஆளுநரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதனால் தமிழ்நாடு சட்டசபையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications