For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாலிகட்டும் நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய அக்கா.. திடீர் மணமகளான தங்கை !

திருச்சி அருகே மணப்பெண் தற்கொலை செய்ய முயற்சித்ததால் திருமண விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

துறையூர்: தாலிகட்டும் நேரத்தில் மணமகள் விஷம் குடித்து தற்கொலைக்கு செய்துகொள்ள முயன்றதால் அந்த பெண்ணின் தங்கை திடீர் மணமகளான சம்பவம் துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி துறையூரை அடுத்த ஒட்டம்பட்டியை சேர்ந்தவர் பாலகுமார் (27). இவருக்கும் சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி சரண்யா(20) என்பவருக்கும் நேற்று முன்தினம் காலை துறையூரில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் மேற்கொண்டிருந்தனர்.

Woman commits suicide after her marriage is called off

இந்நிலையில், நேற்று காலை மணப்பெண்ணை கோயிலுக்கு அழைத்து செல்ல இருந்தபோது அவர் விஷமருந்தி மயங்கிக் கிடந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவர் தொடர்ந்து படிக்க விரும்பியதால், திருமணத்தில் விருப்பமில்லாமல் விஷமருந்தியது தெரிய வந்தது. இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டார் துறையூர் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே, இருவீட்டாரும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மணப்பெண் சரண்யாவின் தங்கை சங்கீதாவை(18) திருமணம் செய்து தர பெண் வீட்டார் சம்மதித்தனர்.

சங்கீதா கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து பாலகுமாருக்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடந்தது. போலீசில் கொடுத்த புகாரும் திரும்ப பெறப்பட்டது. தாலி கட்டும் நேரத்தில் மணமகள் மய

English summary
Woman commits suicide after her marriage is called off in trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X