காஸ்ட்லி தீபாவளி டிரஸ் எடுத்துக் கொடுக்காத புருஷன்..உயிரை விட்ட மனைவி - திருப்பூரில் ஒரு சோகம்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் தீபாவளிக்கு புதுத்துணிகள் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்துள்ள அருள்புரம் ஊராட்சி உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை.

தனியார் பனியன் நிறுவன தொழிலாளியான இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், அனிதா என்ற மகளும் உள்ளனர்.

அதிக விலைக்கு துணி:

தீபாவளிக்கு துணி எடுப்பதற்காக 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் சென்றனர். அதிகமான விலையில் துணி எடுக்க வேண்டாம் என்று செல்லத்துரை கூறியுள்ளார்.

சமாதானமான தம்பதிகள்:

எடுப்பதில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகக் தெரிகிறது. பின்னர், சிறிது நேரத்தில் சமாதானமடைந்த கனவன், மனைவி இருவரும் மகளுடன் கடைக்குச் சென்று துணி எடுத்துக்கொண்டு மாலை 4 மணி அளவில் வீடு திரும்பினர்.

தூக்கில் தொங்கிய சகுந்தலா:

வீட்டுக்கு வந்த மூன்று பேரும் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினர். இரவு 7 மணி அளவில் செல்லத்துரை கண்விழித்து பார்த்த போது அருகில் படுத்திருந்த மனைவியை காணவில்லை. பதற்றமடைந்த செல்லத்துரை வீட்டில் உள்ள அறைக்குச் சென்று பார்த்த போது சகுந்தலா தூக்கில் தொங்கினார்.

போலீசில் புகார்:

இது குறித்து செல்லத்துரை பல்லடம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீஸார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது பற்றி விசாரணை நடக்கிறது.

துணிகளுக்காக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+