#Exclusive பாஜகவின் தேர்தல் ‘தந்திரம்’.. மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது கேள்விக்குறி?
சென்னை: வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகளை பெறுவதற்கு பாஜக செய்யும் 'ட்ரிக்' தான் இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் விமர்சித்துள்ளார் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி.
வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (செப்டம்பர் 20) நிறைவேற்றப்பட்டது. மசோதாவை கொண்டு வர கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசு இந்த மசோதாவை நிறைவேற்ற பலமுறை முயன்றும், பெரும்பான்மை இல்லாத காரணத்தால் நிறைவேற்ற முடியவில்லை. இந்தச் சூழலில், லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளது பாஜக. அதேசமயம், இது எங்களின் கனவு மசோதா, ஆனால், இதை அரசியல் ஆதாயம் தேட பாஜக அரசு கொண்டு வந்துள்ளது, ஓபிசி இட ஒதுக்கீடு முழுமையாக இல்லை என காங்கிரஸ் விமர்சனம் வைத்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம், நமது ஒன் இந்தியா தமிழுக்கு, 'மகளிர் இட ஒதுக்கீடு மசோதா' தொடர்பாக பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். இனி அவரது பேட்டி வருமாறு:
ஸ்ரீநிதி பேட்டி: மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா பல ஆண்டுகளாக நாம் காத்திருந்த மசோதா தான். இது எங்களின் மசோதா. ஏற்கனவே பஞ்சாயத்து ராஜில் 50% இட ஒதுக்கீடு மகளிருக்கு வழங்கியது காங்கிரஸ். பெண்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பது காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியின் கனவு. இன்று வேண்டுமானால், பாஜக, பெண்களின் முன்னேற்றத்திற்காக தாங்களே கொண்டு வருவது போல பேசலாம். ஆனால், இது ராஜீவ் காந்தியின் கனவு.
இத்தனை மேயர்கள், கவுன்சிலர்கள் உள்ளாட்சி மன்றங்களில் பதவி வகிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் காங்கிரஸ் அரசு தான். சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும், முடிவெடுக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக போராடினோம். பெண்களுக்கு வாக்குரிமையே அளிக்கப்படாமல் நசுக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து இன்று பெண்கள் பல இடங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட இடங்களில் அமர்ந்திருக்கிறார்கள்.
பெண்களின் ஓட்டுகளை பெற: இன்று வரை பெண்களின் பிரதிநிநித்துவம் என்பது லோக்சபாவிலும் சரி, மாநில சட்டமன்றங்களிலும் சரி குறைவாகவே உள்ளது. மாநில சட்டமன்றங்களில் வெறும் 10% மட்டுமே பெண்கள் உள்ளனர். லோக்சபாவில் 543 எம்.பிக்களில் 80 எம்.பிக்கள் மட்டுமே பெண்கள் உள்ளனர். இந்தச் சூழலில் இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் இன்னும் 100 எம்.பிக்கள் அதிகமாக வருவார்கள். கட்சிக்கு அப்பாற்பட்டு, திமுக, காங்கிரஸ் என எல்லா கட்சிகளும் வரவேற்கின்றன.
ஆனால், இந்த மசோதாவில் சில உட்கூறுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதைத்தான் இடைஞ்சலாகப் பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதி மறுவரையறை செய்த பிறகுதான் இந்த மசோதா அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்சஸ் எப்போது எடுப்பார்கள் என்பது தெரியவில்லை. இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வருகிறது. அப்படி இருக்கும்போது பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இந்த மசோதாவை அவசரமாக கொண்டு வந்ததாக பாஜக அரசு காட்டிக்கொள்கிறது.
பாஜகவின் ட்ரிக்: பிரதமர் மோடி டயலாக் எல்லாம் பயங்கரமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதனை நிறைவேற்றுவார்களா என்பது கேள்விக்குறிதான். பாஜக வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டு ஏமாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளது. வேலைவாய்ப்பு தருவோம் என பொய் சொல்லி இளைஞர்களின் வாக்குகளை கவர்ந்தது போல, பெண்களின் வாக்குகளை கவர இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கிறார். பெண்கள் மத்தியில் பாஜக ஆட்சியின் பெயர் டேமேஜாக உள்ளது. சிலிண்டர் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பெண்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, பெண்களை குளிர்விக்க பாஜக இதனைச் செய்துள்ளது. இது இவர்களின் ஐடியாவும் இல்லை. காங்கிரஸின் முயற்சி, மற்ற கட்சிகளின் ஆதரவின்மை காரணமாக நிறைவேற்ற முடியவில்லை. இப்போது தங்கள் பெரும்பான்மை பலத்தை வைத்து நிறைவேற்றுகிறார்கள். இதை 9 ஆண்டுகளாக செய்யாமல் தேர்தலின் போது ஏன் செய்ய வேண்டும்? இப்போது இந்த மசோதா அமல்படுத்துவதில் உள்ள அம்சங்களைப் பார்க்கும்போது இது பெண்களின் வாக்குகளை பெறுவதற்கான பாஜகவின் 'ட்ரிக்' என்றே தோன்றுகிறது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications