கருணாநிதி நினைவிடத்தில் புத்தகம் வைத்தால் சுண்டல் மடிக்க கொண்டு செல்வார்கள்.. ராதாரவி பேச்சு
Recommended Video

சென்னை: 'கலைஞருக்கு கலை வணக்கம்' நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன் கருத்தை நடிகர் ராதாரவி ஏற்க மறுத்துள்ளார்.
இதே நிகழ்ச்சியில் ராதாரவியும் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் கரு.பழனியப்பன் கூறிய கருத்தை ராதாரவி மறுத்துள்ளார்.

ராதாரவி கூறியதாவது: கரு. பழனியப்பன் சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் நான் மறுக்கிறேன். புத்தகங்களை கருணாநிதி கல்லறையில் வைத்துவிடுங்கள். யாராவது வந்தால் படிப்பார்கள் என்று கரு.பழனியப்பன் கூறினார்.
ஆனால், அது தப்பான இடம். மெரினா பீச் பகுதி என்பதால், யாராவது சுண்டல் மடிக்க எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். யாராவது வந்தால் படிப்பார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். அதைத்தான் ஸ்டாலின் செய்துகொண்டிருக்கிறார்.
தன்னைப் பார்க்க வருபவர்கள் பொன்னாடைகள் கொண்டுவரவேண்டாம். புத்தகங்களைக் கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளார் ஸ்டாலின். தனக்கு வரும், அந்தப்புத்தகங்களை நூலகத்திற்கு அளித்துவிடுகிறார். இவ்வாறு ராதாரவி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications