மாசுபடும் தண்ணீர்.. இந்த வீடியோ பாருங்க..இனி இப்படியும் நடக்கலாம்! #worldwaterday
சென்னை: ஆறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை அழித்து வீட்டுமனைகளாக்கி காசு பார்த்து கொண்டே போனால் நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு சிறுநீரை சுத்திகரித்து குடிக்கும் நாள் வெகு விரைவில் வந்து விடும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் மக்கள் குடிநீருக்காக தவியாய் தவிக்கின்றனர். ஒரு நாளைக்கு இரண்டு வேளை, இரண்டு நாள்களுக்கு ஒரு முறை என இப்போது தண்ணீர் வினியோகம் 20 நாள்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
அதிலும் சில நேரத்தில் நல்ல தண்ணீரும், சில நேரத்தில் சாக்கடை நீர் கலந்தும் வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வந்த சோழவரம் ஏரி கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டு போயுள்ளது. இதனால் இன்னும் 16 நாள்களுக்குத்தான் சென்னை மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நீர் நிலைகளை அழித்து
ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளை அழித்து வீட்டு மனைகளாக்கப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் தேங்க வழியின்றி சென்னையே அடித்து செல்லும் அளவுக்கு கடந்த ஆண்டு சென்னையி்ல் வெள்ளம் ஏற்பட்டது. ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல் முறையாக செயல்படுத்தப்படவில்லை.
தூர்வாரவில்லை
மேலும் ஏரிகள், குளம், ஆறுகள் ஆகியவை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் அடைமழை பெய்தாலும் அந்த நீரை நாம் காக்க தவறிவிட்டு தற்போது மழை இல்லை என்று கழுதைகளுக்கு கல்யாணம் நடத்தி வருகிறோம்.

அறைகூவல்
கடந்த ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது நீர் நிலைகள் தூர்வாரப்படுவதில்லை என்றும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாகவும் சில அரசியல் கட்சியினர் கூப்பாடு போட்டனர். அத்தோடு சரி, அதை சிந்திப்பதே இல்லை. மழை இல்லாததால் பயிர்கள் கருகி விவசாயிகள் மாண்டு வரும் நிலை ஏற்பட்டு வருகிறது.

மெரினா பாலைவனம்
தண்ணீரின் சிக்கனம் குறித்து சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சென்னை மட்டுமல்ல கிராமங்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்களுக்கு சோலைவனமாக இருந்த மெரினா பாலைவனமாகப் போவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.1500
மெரினாவில் உணவு பண்டங்கள் வாங்கும் கடையில் காலை ஒரு லிட்டர் தண்ணீ்ர் ரூ.1200-க்கு விற்றது. மேலும் மதியம் 300 ரூபாய் அதிகரித்து ரூ.1500-ஆகிறது. மேலும் ஒரு நாளைக்கு ஒருவருக்கு ஒரு லிட்டர் தண்ணீர்தான் வழங்கப்படும் என்பது அரசு விதியாம். அதை சரிபார்க்க ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கினால் கடைக்காரர் என்ட்ரி போடுவதை போல் நமது அடைாள சான்றிதழை தண்ணீர் கடையில் கொடுத்தால் ஒரு லிட்டர் வாங்கினோமா இல்லையா என்பது தெரியும்.

எனர்ஜி டிரிங்க்
நாள் முழுவதும் தண்ணீர் தாகமே எடுக்காத அளவுக்கு எனர்ஜி டிரிங்க் வந்து விடுமாம். அதன் விலை ரூ.500தான். மெரினாவுக்கு அருகில் சிறுநீர் கழிக்கும் இடங்கள் இருக்கும். அங்கு சென்று சிறுநீரை பாட்டிலில் பிடித்துக் கொள்ள வேண்
டும்.

சிறுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
தற்போது தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளதை போல் சிறுநீரை சுத்திகரிப்பு நிலையத்தில் கொடுத்து அதை குடிக்கும் நிலை ஏற்படலாம். இவை அனைத்தும் சிரிக்க அல்ல சிந்திக்க மட்டுமே. இந்த நிலை ஏற்படாமல் இருக்க, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள், மரம் வளர்ப்போம், காடுகளை பாதுகாப்போம். இன்று உலக தண்ணீர் தினம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications