மது போதையில் காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர்- 4 பேர் கைது, ஒருவர் தலைமறைவு
மானாமதுரை: சிவகங்கை அருகே நண்பர்களுக்கு மதுவிருந்து அளித்த வாலிபர் ஒருவர் தனது காதலியை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ள போலீசார் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.
சிவகங்கை அருகேயுள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் ஜெயபாண்டி (22). இவர், கடந்த ஆண்டு சிவகங்கை அரசு கல்லூரியில் பி.ஏ. படித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போது, கீழ வாணியங்குடியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். ஜெயபாண்டியின் நண்பரும் உறவினருமான புதுப்பட்டியை சேர்ந்த கார்த்தி (25) என்பவர் இன்னும் இரண்டு தினங்களில் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல இருக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

வெளிநாடு செல்லும் கார்த்தி, தனது நண்பர்களான புதுப்பட்டியை சேர்ந்த ஜெயபாண்டி (22), ரகு (20), திருமலை (21), வினோத் ஆகியோருக்கு புதன்கிழமை இரவு ஈசனூர் கண்மாய் பகுதியில் மது விருந்து கொடுத்துள்ளார். இந்த மது விருந்தில் கலந்து கொண்ட ஜெயபாண்டி, தனது காதலியான இளம்பெண்ணை இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார்.
மது போதை தலைக்கு ஏறியதால், ஜெயபாண்டி உட்பட ஜந்து பேரும் இணைந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது, ஈசனூரை சேர்ந்த தியாகராஜன் மகன் தென்பாண்டி (30) என்பவர் அந்தப்பக்கம் வந்துள்ளார். அங்கு பாலியல் பலாத்காரத்தில் சிக்கி இளம்பெண் சத்தம் போடுவதை அறிந்த தென்பாண்டி, அங்கிருந்தவர்களிடம் நீங்கள் யார் என்ன செய்கிறீர்கள் என்று சத்தம் போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயபாண்டி உள்ளிட்ட ஐவரும் உதவிக்கு வந்த தென்பாண்டியை கத்தியால் குத்தினர். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தப்பி ஓடிவந்த தென்பாண்டி கிராமத்திற்குள் வந்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். கண்மாய் பகுதிக்கு திரண்டு சென்ற 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இளம்பெண்ணை மீட்டனர். மேலும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஜந்து பேருக்கும் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், இளம்பெண் அளித்த புகாரின்படி ஜெயபாண்டி, ரகு, திருமலை, கார்த்தி ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய வினோத் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிராம மக்கள் தாக்கியதில் காயமடைந்த ஜெயபாண்டி உட்பட நான்கு பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இளம்பெண்ணை கண்மாய்க்குள் வைத்து 5 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications