பழனிமலை ராஜகோபுரத்தில் வாலிபர் தற்கொலை: மூடப்பட்ட சன்னதி
பழனி: தை பூசத்திற்கு தயாராகி வரும் பழனிமலை முருகன் ஆலயத்தின் ராஜகோபுரத்தில் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முருகன் சன்னதி மூடப்பட்டு தரிசனம் நிறுத்தப்பட்டது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனியில் உள்ள முருகன் கோயில். செவ்வாய் தலமாகவும் போற்றப்படும் பெருமைக்குரியது. இன்னும் சில வாரங்களில் பழனி மலையில் தைப்பூசம் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பழனி மலையில் ராஜகோபுரம் அருகே தங்ககோபுரம் உள்ளது. போலீஸ் பாதுகாப்பையும் மீறி 35 வயதுக்குட்பட்ட இளைஞர் ஒருவர் ராஜகோபுரத்தில் தூக்கில்தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இளைஞர் தற்கொலையால் முருகன் சன்னிதானம் மூடப்பட்டு தரிசனம் நிறுத்தப்பட்டது.
தைபூச திருவிழா நடைபெற உள்ள நிலையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் கவனக் குறைவினால்தான் பக்தர் தற்கொலை செய்துகொள்ள நேரிட்டதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications