Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பகீர் திருப்பம்! "எரிசாராயம் இல்லை.. மதுவில் இருந்தது சயனைடு!" தஞ்சை ஆட்சியர் பரபர பேட்டி

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தனியார் பாரில் சட்ட விரோதமாக மது வாங்கி குடித்து இருவர் உயிரிழந்த விவகாரம் குறித்து கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சை கலெக்டர், எஸ்பி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழஅலங்கம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைக்கு எதிரே தனியார் நிறுவனத்தின் பாரும் செயல்பட்டு வருகிறது. இங்கே இன்று காலை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே மது விற்பனை நடந்துள்ளது.

டாஸ்மாக் கடையில் 12 மணிக்குத் தான் மது விற்பனை தொடங்கும் நிலையில், அதற்கு முன்னரே இந்த தனியார் பாரில் சட்டவிரோதமாக மதுவை விற்பனை செய்துள்ளனர்.

2 deaths after consuming liquor from bar might be suicide says Thanjavur collector

அதைத் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி (60) மற்றும் விவேக் (35) ஆகியோர் வாங்கிக் குடித்துள்ளனர். இந்த மதுவைக் குடித்த சில நொடிகளில் குப்புசாமி வாயில் நுரை தள்ளியுள்ளது. மேலும், அவருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில், அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், குப்புசாமி சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

அதேபோல விவேக்கும் மயங்கிய நிலையில், அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுதமிக்கப்பட்டார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் கொஞ்ச நேரத்தில் உயிரிழந்தார். டாஸ்மாக் கடைக்கு எதிரே பாரில் மது குடித்துக் கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் பார் உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். சட்டவிரோதமாக மதுவை விற்ற தனியார் பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்து இருந்ததாகத் தகவல் வெளியானது.

இது குறித்து தஞ்சை கலெக்டர், எஸ்பி கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இருவர் உயிரிழப்புக்குக் காரணமான மதுவில் சயனைடு இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்த தஞ்சை ஆட்சியர், தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் சயனைடு உள்ளது உறுதியாகியுள்ளது என்றும் தற்கொலை அல்லது கொலையாக இருக்க வாய்ப்பு எனக் கருதுகிறோம் என்றும் தெரிவித்தார்.

இருவரில் ஒருவருக்கு குடும்பப் பிரச்சினை இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "அவர்கள் குடித்த மதுவில் எரிசாராயம் இல்லை. மேலும், உயிரிழந்த விவேக்கிற்கு குடும்பப் பிரச்சினை இருப்பதால் அவர் தனியாக இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரும் ஒரே ஆபீசில் வேலை செய்து வருகிறார்கள்.

சயனைடு இருப்பதால் தற்கொலையாகவும் இருக்கலாம். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர். பொதுவாகத் தங்க வேலையில் இருப்போர் சயனைடு பயன்படுத்துவார்கள். எனவே, அந்த கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். சிசிடிவி மற்றும் மொபைல் வீடியோக்களை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.

2 deaths after consuming liquor from bar might be suicide says Thanjavur collector

வேறு யாரும் இதில் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தோம்.. இந்த விவகாரத்தில் தவறு செய்த அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பார் சீல் வைத்துள்ளோம். டாஸ்மாக் கடைக்குச் சீல் வைக்கவில்லை. அருகே இருப்பதால் விசாரணைக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதாலேயே டாஸ்மாக் கடையை மூடி வைத்துள்ளோம். அது நாளை வழக்கம் போலத் திறக்கப்படும். உரிய விசாரணைக்குப் பின்னரே நிவாரண தொகை குறித்து முடிவு எடுக்கப்படும். தற்கொலைக்கு எல்லாம் நிவாரண தொகை அறிவிக்கப்படாது. சயனைடு இருப்பதால் தற்கொலையாகவும் கொலையாகவும் இருக்கலாம். அதேநேரம் எதிர்பாராத விதமாக விபத்தாகவும் கூட இருக்கலாம்" என்றார்

பின்னர் பேசிய மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர், "உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளோம். பார் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக்கில் விற்கப்பட வேண்டி இருந்த மது எப்படி பாருக்கு சென்றது என்பது குறித்து விசாரிக்கப்படும்.

முறைகேடாக மது விற்பனை குறித்து தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பது பொய்யான தகவல். இது போல புகார்கள் வந்த போதெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+