பகீர் திருப்பம்! "எரிசாராயம் இல்லை.. மதுவில் இருந்தது சயனைடு!" தஞ்சை ஆட்சியர் பரபர பேட்டி
தஞ்சை: தனியார் பாரில் சட்ட விரோதமாக மது வாங்கி குடித்து இருவர் உயிரிழந்த விவகாரம் குறித்து கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சை கலெக்டர், எஸ்பி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழஅலங்கம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைக்கு எதிரே தனியார் நிறுவனத்தின் பாரும் செயல்பட்டு வருகிறது. இங்கே இன்று காலை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே மது விற்பனை நடந்துள்ளது.
டாஸ்மாக் கடையில் 12 மணிக்குத் தான் மது விற்பனை தொடங்கும் நிலையில், அதற்கு முன்னரே இந்த தனியார் பாரில் சட்டவிரோதமாக மதுவை விற்பனை செய்துள்ளனர்.

அதைத் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி (60) மற்றும் விவேக் (35) ஆகியோர் வாங்கிக் குடித்துள்ளனர். இந்த மதுவைக் குடித்த சில நொடிகளில் குப்புசாமி வாயில் நுரை தள்ளியுள்ளது. மேலும், அவருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில், அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், குப்புசாமி சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
அதேபோல விவேக்கும் மயங்கிய நிலையில், அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுதமிக்கப்பட்டார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் கொஞ்ச நேரத்தில் உயிரிழந்தார். டாஸ்மாக் கடைக்கு எதிரே பாரில் மது குடித்துக் கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் பார் உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். சட்டவிரோதமாக மதுவை விற்ற தனியார் பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்து இருந்ததாகத் தகவல் வெளியானது.
இது குறித்து தஞ்சை கலெக்டர், எஸ்பி கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இருவர் உயிரிழப்புக்குக் காரணமான மதுவில் சயனைடு இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்த தஞ்சை ஆட்சியர், தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் சயனைடு உள்ளது உறுதியாகியுள்ளது என்றும் தற்கொலை அல்லது கொலையாக இருக்க வாய்ப்பு எனக் கருதுகிறோம் என்றும் தெரிவித்தார்.
இருவரில் ஒருவருக்கு குடும்பப் பிரச்சினை இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "அவர்கள் குடித்த மதுவில் எரிசாராயம் இல்லை. மேலும், உயிரிழந்த விவேக்கிற்கு குடும்பப் பிரச்சினை இருப்பதால் அவர் தனியாக இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரும் ஒரே ஆபீசில் வேலை செய்து வருகிறார்கள்.
சயனைடு இருப்பதால் தற்கொலையாகவும் இருக்கலாம். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர். பொதுவாகத் தங்க வேலையில் இருப்போர் சயனைடு பயன்படுத்துவார்கள். எனவே, அந்த கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். சிசிடிவி மற்றும் மொபைல் வீடியோக்களை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.

வேறு யாரும் இதில் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தோம்.. இந்த விவகாரத்தில் தவறு செய்த அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பார் சீல் வைத்துள்ளோம். டாஸ்மாக் கடைக்குச் சீல் வைக்கவில்லை. அருகே இருப்பதால் விசாரணைக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதாலேயே டாஸ்மாக் கடையை மூடி வைத்துள்ளோம். அது நாளை வழக்கம் போலத் திறக்கப்படும். உரிய விசாரணைக்குப் பின்னரே நிவாரண தொகை குறித்து முடிவு எடுக்கப்படும். தற்கொலைக்கு எல்லாம் நிவாரண தொகை அறிவிக்கப்படாது. சயனைடு இருப்பதால் தற்கொலையாகவும் கொலையாகவும் இருக்கலாம். அதேநேரம் எதிர்பாராத விதமாக விபத்தாகவும் கூட இருக்கலாம்" என்றார்
பின்னர் பேசிய மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர், "உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளோம். பார் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக்கில் விற்கப்பட வேண்டி இருந்த மது எப்படி பாருக்கு சென்றது என்பது குறித்து விசாரிக்கப்படும்.
முறைகேடாக மது விற்பனை குறித்து தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பது பொய்யான தகவல். இது போல புகார்கள் வந்த போதெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications