‛‛மோப்பம் பிடித்த என்ஐஏ’’.. தஞ்சாவூர் ரெய்டில் 2 பேர் திடீர் கைது.. பின்னணி என்ன? பரபர விசாரணை
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்று 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அவ்வப்போது என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை என்பது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள், தொடர்பில் இருப்பதாக கருதப்படும் நபர்களின் வீடு, அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சோதனைகளின்போது லேப்டாப், பென் டிரைவ் உள்பட பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று காலையில் தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் திடீரென்று என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொள்ள தொடங்கினர்.
தஞ்சாவூர் உள்பட தமிழகத்தில் மொத்தம் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். ஹிஜ்புத் தகர், அல் உம்மா இயக்கங்களுடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 4 இடங்களில் என்ஐஏ சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி என்ஐஏ டிஎஸ்பி ராஜன் தலைமையிலான அதிகாரிகர் தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது, சாலியமங்கலத்தில் உள்ள முஜிபுர் ரகுமான், அப்துல் காதர், மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் ஆகியோர் வீடுகளில் என்ஐஏ சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொருவரின் வீடுகளிலும் 4 என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி அங்கிருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் முடிவில் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய மின்னணு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சாலியமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான், அப்துல் காதர் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் 2 பேரை எதற்காக கைது செய்தனர்? பின்னணி என்ன? என்பது பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.
ஆனாலும் கைதான 2 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இந்திய தண்டனை சட்டம் 153 பி, 121 ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 2 பேரையும் மேல்விசாரணைக்காக என்ஐஏ அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications