‛‛மோப்பம் பிடித்த என்ஐஏ’’.. தஞ்சாவூர் ரெய்டில் 2 பேர் திடீர் கைது.. பின்னணி என்ன? பரபர விசாரணை
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்று 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அவ்வப்போது என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை என்பது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள், தொடர்பில் இருப்பதாக கருதப்படும் நபர்களின் வீடு, அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சோதனைகளின்போது லேப்டாப், பென் டிரைவ் உள்பட பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று காலையில் தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் திடீரென்று என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொள்ள தொடங்கினர்.
தஞ்சாவூர் உள்பட தமிழகத்தில் மொத்தம் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். ஹிஜ்புத் தகர், அல் உம்மா இயக்கங்களுடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 4 இடங்களில் என்ஐஏ சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி என்ஐஏ டிஎஸ்பி ராஜன் தலைமையிலான அதிகாரிகர் தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது, சாலியமங்கலத்தில் உள்ள முஜிபுர் ரகுமான், அப்துல் காதர், மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் ஆகியோர் வீடுகளில் என்ஐஏ சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொருவரின் வீடுகளிலும் 4 என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி அங்கிருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் முடிவில் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய மின்னணு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சாலியமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான், அப்துல் காதர் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் 2 பேரை எதற்காக கைது செய்தனர்? பின்னணி என்ன? என்பது பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.
ஆனாலும் கைதான 2 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இந்திய தண்டனை சட்டம் 153 பி, 121 ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 2 பேரையும் மேல்விசாரணைக்காக என்ஐஏ அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications