Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛மோப்பம் பிடித்த என்ஐஏ’’.. தஞ்சாவூர் ரெய்டில் 2 பேர் திடீர் கைது.. பின்னணி என்ன? பரபர விசாரணை

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்று 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் அவ்வப்போது என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை என்பது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள், தொடர்பில் இருப்பதாக கருதப்படும் நபர்களின் வீடு, அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

nia thanjavur

சோதனைகளின்போது லேப்டாப், பென் டிரைவ் உள்பட பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று காலையில் தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் திடீரென்று என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொள்ள தொடங்கினர்.

தஞ்சாவூர் உள்பட தமிழகத்தில் மொத்தம் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். ஹிஜ்புத் தகர், அல் உம்மா இயக்கங்களுடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 4 இடங்களில் என்ஐஏ சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி என்ஐஏ டிஎஸ்பி ராஜன் தலைமையிலான அதிகாரிகர் தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது, சாலியமங்கலத்தில் உள்ள முஜிபுர் ரகுமான், அப்துல் காதர், மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் ஆகியோர் வீடுகளில் என்ஐஏ சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொருவரின் வீடுகளிலும் 4 என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி அங்கிருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் முடிவில் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய மின்னணு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சாலியமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான், அப்துல் காதர் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் 2 பேரை எதற்காக கைது செய்தனர்? பின்னணி என்ன? என்பது பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.

ஆனாலும் கைதான 2 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இந்திய தண்டனை சட்டம் 153 பி, 121 ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 2 பேரையும் மேல்விசாரணைக்காக என்ஐஏ அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+