நடிகை கஸ்தூரி நறுக்..ஒரு கேள்வியும் ஸ்டாலின் கேக்கலியே? சத்யராஜ் எங்கே? மடியில் கை வைக்குதே கர்நாடகா

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: எங்களுக்கு தண்ணீர் தருகிறாயா? இல்லாவிட்டால் கூட்டணியை கலைக்கட்டுமா? என்று ஒரே ஒரு கேள்வியை கேட்காமல், இருக்கிறாரே தமிழக முதல்வர் ஸ்டாலின்? திமுக - காங்கிரஸ் கூட்டாளிகளாக இருப்பதால் காவிரி பிரச்சினையை அவர்கள் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை கிடையாது என்று அதிரடியாக கூறியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

காவிரி நீர் கொடுக்காத கர்நாடகா மாநிலத்துக்கு வழங்கி வரும் மின்சாரம், வணிகத்துக்காக அனுப்பப்படும் உணவுப் பொருட்களை நிறுத்த வேண்டும்" என்று நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

Actress Kasthuri says about DMK MK Stalin and has criticized Cauvery Karnataka Government

கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கஸ்தூரி சொன்னதாவது: "திமுக - காங்கிரஸ் கூட்டாளிகளாக இருப்பதால் காவிரி பிரச்சினையை அவர்கள் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை கிடையாது.. காவிரி நீர் கடல் வரை சென்று கலக்க வேண்டும்.. ஜீவநதி என்ற பெயரே, அப்போதுதான் அந்த நதிக்கு பொருந்தும்.. ஆனால், அங்கங்கே, அணைகளை கட்டினால் அந்த நதி, குளம், குட்டையாகி கடைசியில் சாக்கடையாகத்தான் மாறும்.

காவிரி சொந்தம்: கர்நாடகாவில் உள்ள பாஜக உள்பட அங்குள்ள அனைத்து கட்சிகளும், நமக்குதான் காவிரி சொந்தம் என்று அங்குள்ள மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள்.. கிருஷ்ணசாகர் அணையை கட்டிய விஸ்வரேஸரய்யர்தான், காவிரியை தோண்டி எடுத்தார் என்று இன்னமும் நம்புகிறார்கள்.. அங்கு படித்தவர்கள்கூட இதைத்தான் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு கேவலமான அரசியல் சூழ்நிலையில், வாக்கு அறுவடைக்காக செயல்படும் கர்நாடகா அரசியல்வாதிகளுக்கு நாம் கண்டனத்தை தெரிவித்து வருகிறோம்.

ஆனால், இண்டியா கூட்டணியிலுள்ள தமிழக முதல்வர், தண்ணீர் தருகிறாயா? இல்லை, கூட்டணியை கலைக்கட்டுமா? என்று ஒரே ஒரு கேள்வியை கேட்காமல், திரைமறைவாகச் செயல்படுவோம் என்று சொல்லி வருகிறார்.. அதனால்தான், காவிரி நீர் பிரச்சினைக்கு எல்லாருமே சேர்ந்து போராட வேண்டும்.

சத்யராஜ் எங்கே: தமிழக திரைத்துறையில் இன்று சில விநியோகஸ்தர்கள், வியாபாரிகளை பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக, காவிரி பிரச்சினையில் ஈடுபடாமல் இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. காவிரிக்காக குரல் கொடுத்த நடிகர் சத்யராஜ் போன்றவர்கள், தமிழக முதல்வருக்கு, போனில் தொடர்பு கொண்டாலே, சுலபமாக காவிரி பிரச்சனையை முடித்து விடலாம்.. ஆனால், அவர்கள் ஏன் செய்யவில்லை என்று எனக்குத் தெரியும்.. இருந்தாலும், தெரியவில்லை என்று தான் நான் சொல்ல முடியும்.

நடிகர் சித்தார்த் திமுக - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். ஆனால், அவர் அவமானப்படுத்தப்பட்டபோது, அந்த கட்சியினர் சித்தார்த்தை கைவிட்டு விட்டார்கள்.. அவர் தமிழகத்துக்காகவும், காவிரிக்காகவும் குரல் கொடுத்திருந்தால், அவரது படத்தை இங்குள்ள பார்வையிட்டு அவரை கொண்டாடியிருப்பார்கள். இப்போது, திரைத்துறையில் மத, சாதிய ரீதியாக பிளவுகள் ஏற்பட்டு வருகிறது.

கர்நாடகா: இந்த பந்த்தை தமிழ்நாட்டில் செய்து, தமிழக மக்களுக்கு நஷ்டத்தை தருவதைவிட, கர்நாடகத்தில் எல்லையில செய்தால் நல்லது.. முழு அடைப்பு போராட்டத்தை கர்நாடகா மாநில எல்லையில் நடத்தி, அவர்களுக்கு வழங்கப்படும் மின்சாரம், அனுப்பப்படும் உணவுப் பொருட்களை நிறுத்த வேண்டும். 2 மாநிலங்களுக்கு இடையே உள்ள வணிக செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்..

நாம் ஏன் நம்முடைய மாநிலத்தில் பந்த் நடத்த வேண்டும்? எதுக்காக வருமானத்தையும், நம்முடைய வியாபாரத்தையும் ஏன் கெடுத்து கொள்ள வேண்டும். அவங்க அதைதானே செய்றாங்க? ஒரு சினிமாவைகூட தடுத்து நிறுத்தறாங்களே...

சினிமாவுக்கும், காவிரி தண்ணிருக்கும் என்ன சம்பந்தம்? அவர்களின் எல்லையில் சென்று பந்த் நடத்தி, வியாபாரத்தையும், வருமானத்தையும் தடுத்து நிறுத்தினால்தான், வழிக்கு வருவார்கள் என்று நான் நினைக்கிறேன்.

அடிமடியிலேயே: அவங்க நமக்கு தண்ணீரை நிறுத்தினால், நாம் அவர்களுடனான சகவாசத்தை நிறுத்துவோம்.. தக்காளியிலிருந்து கத்தரிக்காயிலிருந்து, மின்சாரத்திலிருந்து நிறுத்த வேண்டும். நெய்வேலியில் அன்று கரண்ட் நிறுத்தி, போராட்டம் நடத்தியதுமே, அடுத்த 2 நாளில் நமக்கு தண்ணீர் வந்து சேர்ந்ததே.. நம்ம அடிமடியிலேயே கைவைக்கறாங்களே.. நம்ம வாயில் அடிக்கிறாங்களே, வயித்துல அடிக்கிறாங்களே, அவங்களுக்கு மட்டும் எந்த வலியும் தெரியலியே" என்றார் கஸ்தூரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+