Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாட்டுப்பொங்கல் கோலாகலம்..தஞ்சை நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம்..காய்கறிகளால் பிரம்மாண்ட அலங்காரம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோவில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. காய்கறி, பழங்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் 108 பசுக்களுக்கு பூஜை நடைபெற்றது. பெரியகோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

உழவர்களுக்கு உதவி செய்யும் காளைகளுக்கு நன்றி கூறும் விதமாக இன்றைய தினம் மாட்டு பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டுத்தொழுவங்களில் பொங்கல் வைத்து கொண்டாடினர். நெல்லை அருகன்குளம் கோசாலையில் பொங்கல் வைத்து உணவு படைத்து வழிபட்டனர். இங்கு வந்து பொங்கல் வைத்து வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

Mattu pongal Special Abhishekam to Thanjavur Nandhi decoration with vegetables

தஞ்சை பெரியகோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் இந்த கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் மிகப்பெரிய நந்திபெருமான் சிலை உள்ளது. நந்தியம்பெருமானுக்கு மகரசங்கராந்தி விழா பொங்கல் பண்டிகை சிறப்பு பூஜைகள் நேற்று தொடங்கியது. இதையொட்டி நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

மாட்டுப்பொங்கல் பண்டிகையையொட்டி இன்றைய தினம் காலையில் பலவித வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சவ்சவ், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய், வெண்டைக்காய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும் பிரம்மாண்ட நந்தியின் கழுத்தை சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டது.

Mattu pongal Special Abhishekam to Thanjavur Nandhi decoration with vegetables

ஆரஞ்சுபழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா, அன்னாசிப்பழம் போன்ற பலவகையான பழங்களாலும், முறுக்கு மற்றும் பல்வேறு வகையான இனிப்புகளாலும், மலர்களாலும் நந்தியம்பெருமானுக்கு நெக்லஸ் போல அலங்காரம் செய்யப்பட்டது. சந்தன காப்பு பூசப்பட்ட நந்தியின் முகம் ஜொலித்தது. இதனையடுத்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மொத்தம் 700 கிலோ காய்கறிகள், மலர்கள், இனிப்புகள், பழங்களால் நந்தியம்பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டதை காணவே அற்புதமாக இருந்தது.

மாட்டுப்பொங்கலையொட்டி 108 பசுக்களுக்கு பூஜை நடைபெற்றது. நந்தியம்பெருமான் சிலை முன்பு பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, மாடுகள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு வழிபாடு நடைபெற்றது. மேலும் மாடுகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நந்தியம்பெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

மாட்டு பொங்கலை முன்னிட்டு விடுமுறை நாள் என்பதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வந்து பிரகதீஸ்வரரை தரிசனம் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+