பெற்றோருடன் பெண்ணை அனுப்பி வைத்த அடுத்த நாளே.. ஆணவக்கொலை! உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!
தஞ்சாவூர்: சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண்ணை, அவரது காதல் கணவரிடமிருந்து பிரித்து பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்த நிலையில், அப்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
பட்டுக்கோட்டை அருகே வாட்டாத்திக்கோட்டை, நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், இவரது மகள் ஐஸ்வர்யா (19). பக்கத்து கிராமமான பூவாளூரைச் சேர்ந்தவர் பாஸ்கர், இவரின் மகன் நவீன் (19). இருவரும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்து வந்திருக்கின்றனர். அப்போதே இந்த விஷயம் ஐஸ்வரியாவின் வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது. எனவே, நவீனின் வீடு தேடி சென்று பெருமாள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். காரணம் நவீன் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதுதான்.

பள்ளிப்படிப்பு முடிந்ததையடுத்து ஐஸ்வரியா திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். நவீனும், திருப்பூரில் வேறு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இப்படி இருக்கையில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர். சமீபத்தில் திருமணமும் நடந்திருக்கிறது. ஆனால் திருமணம் நடந்த விஷயம் ஐஸ்வரியாவின் வீட்டிற்கு எப்படியோ தெரிய வந்திருக்கிறது. எனவே அவர்கள் ஐஸ்வரியாவை தேட தொடங்கியுள்ளனர். இந்த விஷயத்தை முன்னரே தெரிந்துகொண்ட காதல் ஜோடி வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
மறுபுறம் பெற்ரோர் புகாரின் பேரில் பல்லடம் காவல்துறையினரும் காதல் ஜோடிகளை தேடி வந்திருக்கின்றனர். பின்னர் ஒருவழியாக வீட்டை கண்டுபிடித்த அவர்கள், ஐஸ்வரியாவை மட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு காத்திருந்த பெற்றோர், ஐஸ்வரியாவை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றிருக்கின்றனர். இதன் பின்னர்தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, இவர்கள் சொந்த ஊர் திரும்பிய அடுத்த நாள் ஐஸ்வரியா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அதுமட்டுமல்லாது, அவரது சடலத்தை பெற்றோர்கள் தீயிட்டு எரித்துள்ளனர்.
இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈராயிரம் ஆண்டுகள் பழமையான, தொன்மை வாய்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ் சமூகத்தில் சாதிய ஆணவக்கொலைக்கு முடிவு எப்போது? என சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பினர். அதேபோல இந்த விவகாரம் தொடர்பாக நவீன் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரில், ஐஸ்வரியா ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கில் ஐஸ்வரியாவின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஐஸ்வரியாவின் பெற்றோருக்கு உடந்தையாக செயல்பட்ட பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications