பழனியில் நிலத்தகராறில் துப்பாக்கிச் சூடு- 2 பேர் படுகாயம்- அதிரவைக்கும் சிசிடிவி லைவ் காட்சிகள்!
பழனி: பழனியில் நிலத் தகராறில் தியேட்டர் உரிமையாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடராஜன் துப்பாக்கிச் சூடு நடத்தும் சிசிடிவி காட்சிகளு வெளியாகி உள்ளன.
Recommended Video
பழனி வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர் நடராஜன். அவருக்கும் பழனிச்சாமி, சுப்பிரமணி ஆகியோருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது.

திடீர் துப்பாக்கிச் சூடு
இது தொடர்பான வாக்குவாதத்தின் போது திடீரென தம்மிடம் இருந்து கைத்துப்பாக்கியால் நடராஜன் சுட்டார். இதில் பழனிச்சாமி, சுப்பிரமணி இருவரும் படுகாயம் அடைந்தனர். அப்போது நடராஜனை சுற்றி வளைக்க அப்பகுதியினர் முயன்றனர். ஆனால் அங்கிருந்து நடராஜன் தப்பி ஓடினார்.

இருவர் படுகாயம்
படுகாயம் அடைந்த இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது நடராஜனை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிற்து. அவரிடம் இருந்த கைத்துப்பாக்கி குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

துப்பாக்கி உரிமம்
இந்த விசாரணையில் நடராஜன் துப்பாக்கி உரிமம் பெற்றிருந்தார். கொரோனா லாக்டவுன் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட உரிமம் நடராஜனுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பது தெரியவந்துள்ளது. மேலும் பழனி அரசு மருத்துவமனையில் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

சிசிடிவி லைவ் காட்சி
இதனிடையே நடராஜன் துப்பாக்கிச் சூடு நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் கைத்துப்பாக்கியால் நடராஜன் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார். ஒருவர் அப்படியே சுருண்டு தரையில் விழுகிறார். ஆத்திரம் அடைந்த மற்றொரு நபர் நடராஜனை நோக்கி கட்டையை வீசுகிறார். அங்கிருந்து நடராஜன் தப்பி ஓடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! 3 பேர் கைது -
தூத்துக்குடி கொடூரனுக்கு இரட்டை தூக்கு.. கோவை கேஸிலும் இதே தீர்ப்பை கொடுங்க! மாணவியின் தந்தை குமுறல் -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
மூக்கு சிகிச்சை.. பறிபோன உயிர்! மயக்க மருந்தால் மங்கிய கனவு! சொந்த ஊருக்கு சென்ற நர்சிங் மாணவி உடல்! -
பாதுகாப்பு கேட்டு போலீஸுக்கு போனா..போலீஸ்கிட்ட இருந்தே பாதுகாக்கனும் போல! எக்குத்தப்பு SI-க்கு பாடம் -
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் உடல்.. சொந்த ஊரில் தகனம்! -
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
விஜய் ஆட்சியிலும் காவல்துறை அத்துமீறல்! தென்காசியில் போலீஸ் தாக்கியதில்.. விவசாயி சோக முடிவு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட்












Click it and Unblock the Notifications