திடீரென பெருகிய காட்டாற்று வெள்ளம்.. தேனி அருகே 3 இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்
Subscribe to Oneindia Tamil
தேனி: பெரியகுளம் அருகே ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில், கல்லாறு ஆறு உள்ளது. இங்கு நேற்று இரவு, தென்கரை பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் குளிக்கச் சென்றனர். அப்போது, திடீரென கடும் மழையால் காட்டாற்று வெள்ளம்போல வந்துள்ளது. இதனால் அவர்களை நீரில் அடித்துச் சென்றது. 3 இளைஞர் மட்டும் மரக்கிளைகளை பிடித்து தப்பினர். மேலும் உள்ள மூவரை நள்ளிரவு 12 மணிவரை தேடும் பணி நடந்தது. ஆனால் தேடும் பணி நிறுத்தப்பட்டு, இன்று காலை முதல் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications