Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனியில் 70 கோடி வரி ஏய்ப்பு? போடி திமுக பிரமுகரிடம் அமலாக்கத்துறை துருவி துருவி விசாரணை

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் போடி நகராட்சி தலைவராக ராஜராஜேஸ்வரி என்பவர் இருக்கிறார். இவரது கணவர் சங்கர் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் போடி நகராட்சியில் கவுன்சிலராகவும் இருக்கிறார். நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர் சங்கர் தம்பதி ஏலக்காய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுடைய வீடு மற்றும் ஏலக்காய் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை நடத்தினார்கள். அதிகாரிகள் திமுக பிரமுகரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். பல கோடி வரி ஏய்ப்பு நடந்ததாக என விசாரிக்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் போடியை சேர்ந்த சங்கர் ஏலக்காய் வியாபாரி ஆக இருக்கிறார். இவர் தமிழ்நாடு, கேரளாவில் கொள்முதல் செய்யும் ஏலக்காய்களை, இந்த நிறுவனம் மூலம் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். தற்போது ஏலக்காய் மிக மிக நல்ல விலைக்கு செல்கிறது. இதனால் ஏலக்காய் பயிரிட்டவர்கள் பெரும் லாபம் சம்பாதித்து வருகிறார்கள். இந்நிலையில் சங்கர் ஏலக்காய் வியாபாரி மட்டுமல்ல.. தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினராகவும், போடி நகராட்சி கவுன்சிலராகவும் உள்ளார். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி, போடி நகராட்சி தலைவராக இருக்கிறார்.

70 crore tax evasion in Theni Enforcement Department probes DMK leader in Bodi

சங்கர் நடத்தும் ஏலக்காய் வர்த்தக நிறுவனத்தில் வரிஏய்ப்பு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) வீரர்களின் பாதுகாப்புடன் போடிநாயக்கனூரில் முகாமிட்டு, சங்கரின் வீடு மற்றும் ஏலக்காய் வர்த்தக நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அவரது மனைவி, மகன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். ஆனால் சங்கர் வெளியூர் சென்றிருந்ததால் அவரிடம் விசாரிக்க முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக அவரது வீடு, ஏலக்காய் நிறுவனத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காலை 11 மணி அளவில் ஒரு காரில் சங்கர் தனது வீட்டுக்கு வந்தார். இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அவரை காரில் போடி நகர்ப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று துருவி, துருவி விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இரவு வரை இந்த விசாரணை நடந்தது.

சங்கரின் ஏலக்காய் நிறுவனம் மூலம் சுமார் ரூ.70 கோடிக்கு மேல் வரிஏய்ப்பு நடைபெற்று இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். மேலும் இதுதொடர்பாக போடி நகராட்சி கவுன்சிலர் முருகேசன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதனால் போடியில் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+