வசூல்ராஜா பாணியில்.. நீட் தேர்வே எழுதாமல் எம்பிபிஸ் சேர்ந்த மாணவர்.. தேனி மெடிக்கல் காலேஜில் ஷாக்
தேனி: கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே நடத்தப்படும் நீட் தேர்வில் மாணவர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து மற்றொருவரை எழுத வைத்து வெற்றி பெற்ற மாணவர், தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.. இந்த சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எம்பிபிஎஸ் படிக்க ஆசைப்பட்ட சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி இருக்கிறார்.ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் கமல் நடித்த வசூல்ராஜா படப்பாணியில் ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒருவரை எம்பிபிஸ் நுழைவுத்தேர்வு (நீட் தேர்வு) எழுதவைக்க அந்த மாணவர் திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் ஆள்மாறாட்டம் செய்தால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று எண்ணி மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்வு மையத்தை தேர்வு செய்ததாக கூறப்பபடுகிறது. இதன்படி வேறு ஒருவரை நீட் தேர்வு எழுதவும் வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற அந்த மாணவருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கு இடம் கிடைத்துள்ளது. இதன்படி தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்துவந்த மாணவர் மீது ஆள்மாறாட்ட புகார்கள் வந்தது.
புகாரைத் தொடர்ந்து ஹால் டிக்கெட் புகைப்படமும், மாணவரின் புகைப்படமும் மாறுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தேனி மருத்துவக் கல்லூரி விசாரணைக்காக மாணவரின் ஆவணங்களை சுகாதாரத்துறையின் ஆய்வுக்கு அனுப்பி இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நுழைவுத் தேர்வு எழுதியபோது ஆள்மாறாட்டம் நடந்ததா என சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. ஆள்மாறாட்ட சந்தேகம் எழுந்தபின் சம்பந்தப்பட்ட மாணவர் மருத்துவக் கல்லூரிக்கு வரவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் குறித்து முழு விசாரணைக்கு பின்னர் உண்மை தெரியவரும் என கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications