டிஜிட்டல் இந்தியா.. டிஜிட்டல் இந்தியாதான்யா.. கழுதை & குதிரை மேல் கொண்டு செல்லப்பட்ட ஈவிஎம்கள்!
தேனியில் வாக்கு பதிவு எந்திரங்கள் கழுதை மேல் வைத்து எடுத்து செல்லப்பட்ட சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.
தேனி: தேனியில் வாக்கு பதிவு எந்திரங்கள் கழுதை மேல் வைத்து எடுத்து செல்லப்பட்ட சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.
லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. நாளை மொத்தம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நாளை 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.

தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலை கிராமங்களான சென்ட்ரல் முட்டம், ஊரடி, ஊத்துக்காடு பகுதிகளுக்கு பெரிய அளவில் சாலை வசதி கிடையாது. இதில் உள்ளூர் கிராமங்களுக்கு செல்ல பெரியகுளம் வழியாக எட்டு கிலோமீட்டர் தூரம் உள்ள மலைப்பாதையில்தான் செல்ல வேண்டும்.
இங்கு போக்குவரத்திற்கான சாலை வசதி இல்லாததால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். குதிரைகள் மற்றும் கழுதைகள் மூலமாக வாக்குப்பதிவு நடத்தும் அலுவலர் மகேஸ்வரன் தலைமையில் போடி தாலுகா சிறப்புக் காவல் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு சென்றனர்.

459 வாக்காளர்களுக்கான பேலட் யூனிட் 2, கட்டுப்பாட்டு கருவி 2 , VV PAT ஆகியவைகளை இரண்டு குதிரைகளிலும், கழுதைகளிலும் கொண்டு சென்றனர். அதேபோல் இன்று முதல் நாளை வாக்குப்பதிவு முடியும் வரை இங்கிருந்து செல்லும் வாக்குப்பதிவு அலுவலர் காவல்துறையினர் உட்பட 10 நபர்களுக்கு உணவுப் பொருட்கள் இன்னொரு குதிரையிலும் எடுத்து செல்லப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக வாக்கு பதிவு எந்திரங்கள் கழுதை மற்றும் குதிரை மேல் வைத்து எடுத்து செல்லப்பட்ட சம்பவம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications