துப்பாக்கி குண்டுகள் முழங்க.. சொந்த ஊரில் மேஜர் ஜெயந்த் உடல் தகனம்.. வீரவணக்கம் செலுத்திய கிராம மக்கள்
மேஜர் ஜெயந்தின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தேனி: அருணாச்சலப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. இறுதிசடங்கில் குடும்பத்தினர், கிராம மக்கள், ராணுவ வீரர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
சீன எல்லையை ஒட்டி அமைந்து உள்ள வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மண்டாலா மலைப் பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா என்ற ஹெலிகாப்டர் நேற்று காலை 9:15 மணியளவில் புறப்பட்டது.
இந்த ஹெலிகாப்டரில் இரண்டு பைலட்டுகள் இருந்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

ஹெலிகாப்டர் விபத்து
திராங் பகுதியில் இருந்து தவாங் செல்லும் வழியில் உள்ள பொம்திலா என்ற மலைப்பகுதிகள் நிறைந்த இடத்தில் விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து ஹெலிகாப்டரில் இருந்த விமானிகளை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின், ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் உயிரிழந்தது தெரியவந்தது.

தமிழக விமானி பலி
லெப்டினண்ட் வி.வி.பி. ரெட்டி மற்றும் அவரது உதவி விமானி மேஜர் ஜெயந்த் என்று அடையாளம் காணப்பட்டு இருந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தேனி மாவட்டத்தில் உள்ள ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்த் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானது அப்பகுதியை சோகத்தில் மூழ்க வைத்தது.

மதுரை வந்த ஜெயந்த் உடல்
தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டியின் உடல் ஹைதராபாத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேஜர் ஜெயந்தின் உடல் விமானப்படை விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மேஜர் ஜெயந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேபோல் அமைச்சர் ஐ.பெரியசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை
பின்னர் காலை மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்திற்கு மேஜர் ஜெயந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்னர் அவரது உடலுக்கு மாவட்ட நிர்வாகம், குடும்பத்தினர், கிராம மக்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலித்தினர். இதனைத் தொடர்ந்து, மேஜர் ஜெயந்தின் உடல் ராணுவ வண்டியில் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிசடங்கு நடத்தப்பட்டது. இறுதியாக துப்பாக்கி குண்டுகள் முழங்க மேஜர் ஜெயந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது கிராம மக்கள் அனைவரும் வீரவணக்கம் என்று முழங்கி இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications