பண்ணை வீட்டில் புகுந்த ஓ ராஜா.. கிரீன்வேஸ் சாலை வீட்டில் நுழைந்த ஓபிஆர்.. போகிற போக்கில் அணுகுண்டு
தேனி: அதிமுக பொதுக் குழுவை கூட்டுவதா வேண்டாமா என்ற கேள்விக்கு ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியுமான ஓ பி ரவீந்திரநாத் கூறிய பதில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் ரவீந்திரநாத் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். சிறிது நேரம் ஆலோசனைக்கு பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை ஓ பி ரவீந்திரநாத் சந்தித்து பேசினார். அவர் பேசுகையில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சரை சந்தித்தேன். இதை அரசியலாக்குவதில் எவ்வித நியாயமும் இல்லை.

பொதுக் குழு
திட்டமிட்டப்படி பொதுக்குழு நடைபெறுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள். தற்போது பொதுக்குழு தொடர்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், தமிழக அரசும் இது தொடர்பாக ஒரு முடிவெடுக்கும்.

சட்ட வல்சட்ட வல்லுநர்கள்
நீதிமன்றத்தை நாடி சட்ட வல்லுநர்களும் முடிவெடுப்பார்கள். ஓபிஎஸ்ஸை யாரும் ஓரங்கட்ட முடியாது என எம்.பி. ரவீந்திரநாத் தெரிவித்தார். மேலும் ஓபிஎஸ் பின்னணியில் சசிகலாவும் டிடிவி தினகரனும் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

ஆதாரம் இல்லை
அதற்கு ஓ ரவீந்திரநாத், அதற்கு ஆதாரம் ஏதும் இல்லையே என்றார். தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்ஸின் பண்ணை வீட்டில் நேற்று முன் தினம் மாலை நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது அங்கு வந்த ஓபிஎஸ் தம்பி ஓ ராஜா, ஓபிஎஸ் கட்சிக்காக நிறைய விட்டுக் கொடுத்தார். இப்போது அனுபவிக்கிறார்.

சசிகலா பின்னணியா
சசிகலா தலைமையில் அதிமுக விரைவில் நல்வழிப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாளை மறுநாள் பொதுக் குழு கூட்டம் கூட்டப்படும் என எடப்பாடி தரப்பினர் கூறுகிறார்கள். ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் எப்படி கூடும் என்ற கேள்வி எழுகிறது. எடப்பாடி பழனிச்சாமியை வழிமொழிய வேண்டும் என ஓபிஎஸ்ஸுக்கு பல நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். ஆனால் இந்த முறை ஓபிஎஸ் விட்டுக் கொடுப்பதாக இல்லை என்றே தெரிகிறது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி












Click it and Unblock the Notifications