தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்களுக்கு பொய் சொல்ல தெரியாது… பொய் வாக்குறுதியை தரவும் மாட்டோம்… குஷ்பு பேச்சு

Google Oneindia Tamil News

தேனி: பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பிரச்சாரத்தை தொடங்கியுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

Rahuls rule will be the protection For women: Kushboo Campaign

அப்போது பேசிய அவர், பொய்யான வாக்குறுதிகளை நாங்கள் வழங்குவது இல்லை என்றும், எங்களுக்கு பொய் சொல்லவும் தெரியாது எனவும் கூறினார். மேலும், கேபிள் டிவியில் லட்சுமி ஸ்டோரை பார்த்து தானே எனக்கு கைகொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கிறீர்கள் என்று பேசிய குஷ்பு, அந்த கேபிள் தொகையை கூட கூட்டி விட்டார்கள் என்றார்.

உலகத்திலேயே சிறந்த தலைவராக இருந்தவர் கருணாநிதி என்றும், அவருடைய கட்சியுடன் மாபெரும் கூட்டணி அமைத்துள்ளதாகவும் கூறினார். ஏற்கனவே 72 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு ஒன்னும் செய்யவில்லையா?.. விவாதிக்க தயாரா?.. முதல்வருக்கு ப.சிதம்பரம் சவால் தமிழகத்திற்கு ஒன்னும் செய்யவில்லையா?.. விவாதிக்க தயாரா?.. முதல்வருக்கு ப.சிதம்பரம் சவால்

அதேபோல், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வோம் என்றும் இப்பொழுது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் ராகுல் ஆட்சிக்கு வர வேண்டும் என பிரச்சாரம் செய்தார். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருகிற 12 ஆம் தேதி தேனி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிட்த்தக்கது.

English summary
Kushboo Campaign In Theni: Rahul's rule will be the protection For women
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X