சிரிச்சிட்டே சொன்ன தேனி பூபாலன்.. "சங்கு பிடிச்சு நெம்பிட்டேன்..ம்மா" .. 60 சவரன் தங்க நகை போட்டும்?
இந்நிலையில், தன்னுடைய கணவரும், மாமனார் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை செய்வதாக, தேனி பெண் புகார் தந்துள்ளார்.. 60 சவரன் நகை, பைக், உள்ளிடட சீர்வரிசைகளை தந்தும், இன்னும் வரதட்சணை வேண்டும் என்று கேட்டு, பூபாலன், தன்னை தாக்கியதாக தங்கப்பிரியா புகாரில் கூறியிருந்தார்.

நாத்தனரை காணோம்இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பூபாலனும் கைதாகி உள்ளார்.. தம்பதியினரிடையே மோதலைத் தூண்டிவிட்டதே, தன்னுடைய மாமனார், மாமியார், நாத்தனார்தான் என்று, பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியிருக்கிறார்.. ரூமில் பூட்டி வைத்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கணவர் தன்னை தாக்கியதாகவும் தங்கப்பிரியா கண்ணீர் விடுகிறார்.
தங்கபிரியாவின் முகம் , கை , கால் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் அடைந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தங்கைக்கு பூரிப்பு
நேற்றைய தினம், தன்னுடைய தங்கையிடம் பூபாலன் பேசிய ஆடியோ ஆன்லைனில் வெளியாகி, அதிர்ச்சியை தந்திருந்தது.. அதில் தன்னுடைய கழுத்தை நெரித்தும், காலால் மிதித்தும் டார்ச்சர் செய்ததாக தங்கையிடம் சிரித்து கொண்டே பேசியிருந்தார் பூபாலன்.வாயில் குத்தினேன்.. கழுத்து, கைகாலில் அடிச்சுதல அவளால நடக்கக்கூட முடியல என்று பூபாலன் சொன்னதை கேட்டு, தங்கை அனிதா சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அம்மா - மகன் உரையாடல்
இன்றைய தினம் மருமகள் மாமனாரிடம் பேசிய ஆடியோவும், தன்னுடைய அம்மாவிடம் பூபாலன் பேசிய ஆடியோவும் வெளியாகி வைரலாகி , பொதுமக்களின் கோபத்தை மேலும் அதிகமாக்கிவிட்டு வருகிறது.
அம்மா: படாத இடத்தில் பட்டிருந்தா என்னாவது?
பூபாலன்: சங்கு பிடிச்சு நெம்பி விட்டுட்டேன்.. குரல்வளையை பிடிச்சி நெறிச்சதுமே, தொண்டை கட்டிக்கிடுச்சு.. வலியில் எச்சைகூட விழுங்க முடியல.. ரொம்பலி வலிக்குது போல.. ஆளே ஒரு மாதிரி ஆயிட்டா.. சுணங்கிட்டாள்.. முகமெல்லாம் அவளுக்கு மாறிப்போச்சு..
அம்மா: அப்ப திமிர்ல ஏன் இவ்ளோ பேசுறா?
பூபாலன்: நமக்குள்ள நடக்கிற வீட்டு விஷயத்தை பூரா ஏன் அவங்ககிட்ட சொல்றேன்னு என்னை கேட்குறா.. வீட்டுக்கு பெரியவங்க அவங்கதான், வீட்டு விஷயத்தை அப்பா, அம்மா கிட்டதானே சொல்ல முடியும்? ஒரு பிரச்சனை வந்தப்போ நீதானே என் அப்பாகிட்ட பேசுனே? அப்ப மட்டும் மாமனார் தேவையா உனக்கு?"ன்னு கேட்டேன்" என்று பூபாலன் பேசுகிறார்.
| {https://lh3.googleusercontent.com/a/ACg8ocJWPKElIHjZrs8SP6KWxjayVJvW4OFt5t7gkWqNEMw2AKqtjdnM=s40-p} | |












Click it and Unblock the Notifications