பிள்ளையார்பட்டியை தொடர்ந்து பெரியகுளத்திலும் வள்ளுவர் சிலைக்கு அவமரியாதை.. தேனியில் பரபரப்பு
Recommended Video
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வள்ளுவர் சிலைக்கு மர்மநபர்கள் அவமரியாதை செய்து விட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக சென்றிருந்தார். அவர் அங்கு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார்.

இது தொடர்பாக தமிழக பாஜக செய்தி வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியது. திருவள்ளுவருக்கு காவி உடையும் நெற்றியில் விபூதியும் அணிவித்தது போன்ற புகைப்படத்தை தமிழக பாஜக வெளியிட்டது. இதற்கு தமிழ் ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை மர்ம நபர்கள் அவமானப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளுவரை அவமானப்படுத்தியதாக திமுக இலக்கிய அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் சுவர், கம்பிக் கதவு அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சிசிடிவியும் அமைக்கப்படுகிறது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தேனி மாவட்டம் பெரியகுளத்திலும் ஒரு சம்பவம் நடந்துவிட்டது. பெரியகுளத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மர்மநபர் ஒருவர் மை பூசி அவமரியாதை செய்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த பாஜகவினர், சம்பவ இடத்துக்கு வந்து திருவள்ளுவர் சிலையை தண்ணீர் ஊற்றி கழுவி, பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர். திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications