கள்ளக்காதலனுடன் அம்மாவை ரூமுக்குள் வைத்து பூட்டிய 15 வயது மகள்.. நெல்லையில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கள்ளக்காதலனுடன் அம்மாவை ரூமுக்குள் பூட்டி வைத்துவிட்டார் 15 வயசு பெண்.. இந்த சம்பவம் நெல்லையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாளையங்கோட்டை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண், நெல்லையில் ஒரு அரசு பள்ளியில் டீச்சராக வேலை பார்க்கிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இந்த டீச்சருக்கு வயசு 40 ஆகிறது. 15 வயசில் 10-வது படிக்கும் பெண் இருக்கிறாள்.

15 year old girl locked in a room with mother and her lover

இந்நிலையில் டீச்சருக்கு நாகர்கோவிலை சேர்ந்த 29 வயசு இளைஞர் ஒருவர் பழக்கமாகி உள்ளார். இதனால் அடிக்கடி வீட்டுக்கும் வந்து போகவும், இருவருக்குள்ளும் கள்ள தொடர்பு பற்றி கொண்டது. இவர்கள் இப்படி நெருக்கமாக பழகி வந்தது 15 வயது மகளுக்கு தெரிய வந்துள்ளது போலும்.

இந்தநிலையில், மகள் வீட்டில் இருக்கும்போதே அந்த இளைஞரை தாய் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அத்துடன் இல்லாமல் இளைஞரை அறைக்குள் கூட்டிக் கொண்டுபோய், உள்பக்கமாக தாழ்ப்பாளும் போட்டு கொண்டனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண், ஆத்திரமடைந்து, கள்ளக்காதலன், அம்மா இருவரையும் அந்த ரூமுக்குள்ளேயே வைத்து வெளிப்பக்கமாக பூட்டியும் விட்டார். இதை பற்றி சொந்தக்கார்களுக்கும் போன் போட்டு சொல்லி விட்டார்.

கொஞ்ச நேரத்தில் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு வந்துவிட்டனர். டீச்சரையும், அந்த இளைஞரையும் பிடித்து சரமாரியாக வெளுத்து வாங்கியதுடன், போலீசிலும் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக மேலப்பாளையம் போலீசார் விசாரித்தனர். அப்போது, "கள்ளக்காதலனுடன் தான் நான் வாழ்வேன், அவர்மீது யாரும் கை வைக்கக்கூடாது" என்று டீச்சர் போலீசாரிடம் அடம் பிடிக்கவும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீசார் இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+