தினமும் கொலை, கொள்ளை.. இதுதான் தி.மு.க ஆட்சியின் சாதனை.. ஓ.பி.எஸ் பரபரப்பு பேச்சு!
திருநெல்வேலி: தி.மு.க ஆட்சியின் அவலநிலையை எடுத்து சொல்லி உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது

அ.தி.மு.க
உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சிகளை விட அ.தி.மு.க முதன் முதலாக வேகமாக களமிறங்கி உள்ளது. ஏனெனில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே கட்சியில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி 9 மாவட்டங்களிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தற்போது அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கடசியினருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனை கூட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையை அடுத்த செங்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு வேட்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது

பொய்யான வாக்குறுதிகள்
தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் வாக்களித்து இன்று அதற்கான கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடக்கிறது. இதுதான் திமுக ஆட்சியின் சாதனைகளாக இருக்கின்றது. கடந்தகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும்.

வேண்டுகோள்
இத்துடன் இன்றைய தி.மு.க ஆட்சியின் அவலநிலையை எடுத்து சொல்லி உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும். வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்று ஓபிஎஸ் கூடியிருந்த வேட்பாளர்கள் இடையே வேண்டுகோள் விடுத்தார் இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம் இசக்கி சுப்பையா மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications