Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தினமும் கொலை, கொள்ளை.. இதுதான் தி.மு.க ஆட்சியின் சாதனை.. ஓ.பி.எஸ் பரபரப்பு பேச்சு!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தி.மு.க ஆட்சியின் அவலநிலையை எடுத்து சொல்லி உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது

அ.தி.மு.க

அ.தி.மு.க

உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சிகளை விட அ.தி.மு.க முதன் முதலாக வேகமாக களமிறங்கி உள்ளது. ஏனெனில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே கட்சியில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி 9 மாவட்டங்களிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தற்போது அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கடசியினருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையை அடுத்த செங்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு வேட்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது

பொய்யான வாக்குறுதிகள்

பொய்யான வாக்குறுதிகள்

தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் வாக்களித்து இன்று அதற்கான கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடக்கிறது. இதுதான் திமுக ஆட்சியின் சாதனைகளாக இருக்கின்றது. கடந்தகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

இத்துடன் இன்றைய தி.மு.க ஆட்சியின் அவலநிலையை எடுத்து சொல்லி உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும். வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்று ஓபிஎஸ் கூடியிருந்த வேட்பாளர்கள் இடையே வேண்டுகோள் விடுத்தார் இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம் இசக்கி சுப்பையா மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+