ஆந்திரா அம்மம்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு- திருவள்ளூரில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம்
திருவள்ளூர்: ஆந்திரா மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து 1100 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி- மரக்காணம் இடையே அதிகாலை 2.30 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது. கடந்த கால புயல்களைப் போல பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தவில்லை.

அதேநேரத்தில் பெருமளவு மழையை வாரி கொடுத்திருக்கிறது நிவர் புயல். நிவர் புயல் தாக்கத்தினால் ஆந்திராவிலும் மழை பெய்தது.
ஆந்திராவின் அம்மம்பள்ளி அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 1,100 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதையடுத்து தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications