தமிழகத்தில் ஏப்.18, கேரளாவில் ஏப்.23.. வாக்குப்பதிவு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை
Recommended Video

குற்றாலம்: தமிழகத்திலும், கேரளாவிலும் லோக்சபா தேர்தலை சிறப்பாக நடத்துவது தொடர்பாக இரு மாநில அதிகாரிகளும் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் ஏப்ரல் 23ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும், கேரளாவிலும் தேர்தலை சிறப்பாக நடத்துவது தொடர்பாக இரு மாநில அதிகாரிகளும் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது.

அரசு அதிகாரிகள் ஆலோசனை
கூட்டத்தில் கொல்லம் ஆட்சியர் கார்த்திக்கேயன், கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைமன் ஜார்ஜ் , தென்காசி லோக்சபா தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம் உட்பட காவல்துறை, வருவாய்த்துறை என இரு மாநில அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பட்டியல் சரிபார்ப்பு
பின்னர் கொல்லம் ஆட்சியர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரு மாநில எல்லையில் உள்ள வாக்காளர்கள் பட்டியல் சரிபார்ப்பது, முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் நடப்பதால் பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

வாட்ஸ் அப் குரூப்
புதியதாக இரு மாநிலத்தின் எல்லைப்புற மாவட்ட காவல்துறையினர் வாட்ஸப் குரூப் துவக்கப்பட்டுள்ளது. தேர்தலை பாதுகாப்பானதாக நடத்த இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.

வாகன சோதனை தீவிரம்
தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம் கூறியதாவது:கூட்டத்தில் இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள் பட்டியல் விவரத்தை பரிமாறி கொள்ளப்பட்டது. தேர்தல் காலம் நெருங்குவதால் எல்லைப்பகுதியில் இரு மாநில அதிகாரிகளும் இணைந்து வாகன சோதனையில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தகவல்
இரு மாநில எல்லையில் உள்ள கொல்லம், நெல்லை மாவட்டங்களில் உள்ள தகவல்களை பரிமாற முடிவு செய்யப்பட்டது. அதற்கு வாட்ஸ் அப் குரூப் தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications