பா.ஜ.க நிர்வாகி மீது தாக்குதல்.. தி.மு.க எம்.பி ஞானதிரவியம், 2 மகன்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு!
திருநெல்வேலி: பா.ஜ.க நிர்வாகியை தாக்கியதாக தி.மு.க எம்.பி ஞானதிரவியம், அவரது மகன்கள் 2 பேர் உள்பட 30 பேர் மீது பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே காவல்கிணறு விலக்கில் ஹோட்டல் ஓன்றில் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன் என்பவர் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு திருநெல்வேலி தி.மு.க எம்.பி ஞானதிரவியம் மற்றும் ஆதரவாளர்கள் வந்தனர்.

பா.ஜ.க நிர்வாகி மீது தாக்குதல்
ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரனை தாக்கியதாக கூறப்படுகிறது. ஹோட்டலில் இருந்த கேமராக்களையும் அவர்கள் அடித்து உடைத்து சென்று விட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதில் காயம் அடைந்த பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரனை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

அண்ணாமலை கண்டனம்
இதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன் மீது தி.மு.க எம்.பி ஞானதிரவியம் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்திய ஞானதிரவியம் மீது கடுமையான வழக்குப்பதிவு செய்து காவல்துறை சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீசார் வழக்குப்பதிவு
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களே இதுபோன்ற வன்முறை கலாசாரத்தை கையில் எடுப்பது தமிழத்தின் அமைதிக்கு மிக மிக ஆபத்தை விளைவிக்கும் என்பது உறுதி. ஞானதிரவியம் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், பாஜக கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்க வேண்டியதிருக்கும்' என்று அண்ணாமலை கூறி இருந்தார். இந்த நிலையில் பா.ஜ.க நிர்வாகியை தாக்கியதாக தி.மு.க எம்.பி ஞானதிரவியம் மீது பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எம்.பி ஞானதிரவியம், அவரது மகன்கள்
தி.மு.க எம்.பி ஞானதிரவியம், அவரது மகன்கள் ராஜா, தினகரன், ஜெபகுமார் என்பவரது மகன் நவீன் உள்ளிட்ட 30 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 147( கலவரத்தை தூண்டுதல்), 294(b) அவதூறாக பேசுதல், 323(காயம் ஏற்படுத்துதல்), 506(2) ஆயுதத்துடன் கொலை மிரட்டல்.உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications