இரவோடு இரவாக இரு தரப்பு கடும் மோதல்.. பைக், கார், ஆட்டோ உடைப்பு.. தீ வைப்பு.. பதற்றத்தில் நெல்லை
திருநெல்வேலி: நெல்லை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால், பைக்குகள், கார் ஆட்டோ உடைக்கப்பட்டன. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
நெல்லை மாநகரத்தை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் மருதநகர் பகுதியை சார்ந்த பாலமுருகன் என்ற பால முகேஷுக்கு (17)அரிவாள் வெட்டுவிழுந்தது .

இதனையடுத்து அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இதனால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் கார் ,ஆட்டோ ,பைக், சில வீடுகள் கல்லெறிந்து சேதம் அடைந்துள்ளது. வைக்கோல் படப்புக்கும் தீ வைக்கப்பட்டதினால் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தனர்.
நேற்று இரவு இந்த அடிதடி அரங்கேறியுள்ளது.
இதையடுத்து, ஒரு தரப்பினர் மேலப்பாளையம் அம்பாசமுத்திரம் சாலையில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டத் தொடங்கினர். . மற்றொரு தரப்பினரும் மருதம் நகர் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான போலீசார் முன்னீர்பள்ளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ராஜராஜன், சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே முன்னீர்பள்ளம் அருகே கோபாலசமுத்திரத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமிற்கு ஆறு பேர் மூன்று இரண்டு சக்கர வாகனத்தில் சென்று உள்ளனர் . அங்கிருந்த பெருமாள் மற்றும் சின்னத்துரை என்ற இலங்கை அகதிகளையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இடதுகை மணிக்கட்டு துண்டிக்கப்பட்டவர், பலத்த வெட்டுக்காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து இலங்கை தமிழர் இலங்கை முகாமை சேர்ந்தவர்கள், அம்பை மெயின்ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை மாநகர பகுதியில் பதட்டம் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications