Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளியில் சாதி சான்றிதழ் எதுக்கு? பட்ட அவமானங்களால் உடைந்து பேசிய நாங்குநேரி சின்னத்துரை.. கலங்குதே

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இந்த தம்பதியின் மகன் சின்னத்துரை. மகள் பெயர் சந்திரா. இவர்கள் 2 பேரும் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இந்த தம்பதியின் மகன்சின்னத்துரை. மகள் பெயர் சந்திரா. இவர்கள் 2 பேரும் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.

nanguneri student chinnadurai caste certificate

இந்நிலையில் தான் சாதிய வன்கொடுமையால் சக மாணவர்கள் கடந்த ஆண்டு சின்னத்துரையின் வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் வெட்டினர். மேலும் தடுக்க போன சந்திராவையும் வெட்டிவிட்டு ஓடினர். இதனை பார்த்த அதிர்ச்சியில் சின்னத்துரையின் தாத்தா கிருஷ்ணன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. இதையடுத்து அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த சின்னத்துரை, சந்திரா ஆகியோர் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்தனர். இந்த வழக்கில் 6 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிளஸ் 2 படித்தபோது சின்னத்துரைக்கு இந்த கொடூர சம்பவம் நடந்தது. அதன்பிறகு அவர் மீண்டும் பள்ளி படிப்பை தொடங்கினார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக சின்னத்துரை பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், இவரது சகோதரி பாளையங்கோட்டையில் உள்ள மேரி சார்ஜென்ட் பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர். இருவரின் படிப்பு செலவை அரசு ஏற்றது. இந்நிலையில் தான் சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் மாணவர் சின்னத்துரை 600-க்கு 469 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

சின்னத்துரைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். சாதிய வன்கொடுமை தாக்குதல், தொடர் மருத்துவ சிகிச்சைக்கு பிறகும் அவர் தனது தொடர்ந்து படிப்பை கைவிடாமல் இருந்ததை பலரும் பாராட்டினார்கள். நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் சின்னத்துரையை பாராட்டி சான்று மற்றும் உதவித்தொகை வழங்கினர். இந்நிலையில் தான் நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் நாங்குநேரி மாணவன் சின்னத்துரை பங்கேற்று உருக்கமாக பேசினார். அவர் கூறியதாவது:

கடந்த வருடத்தில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். இந்த சம்பவம் நடந்து ஒரு வருடமும் 2 நாட்களும் ஆகிறது. நிறைய கஷ்டங்கள், அவமானங்களை நான் சந்தித்து வந்தேன். ஒவ்வொரு ஊரிலும் சாதி அடையாளத்துடனும், கையில் சாதி கயிறும் கட்டுகின்றனர். இதனால் தான் பள்ளியிலும் சாதி அடையாளங்களுடன் இருக்கின்றனர். பள்ளியில் சாதி சான்றிதழ் எதுக்கு வாங்குறாங்க? என்று தெரியவில்லை. சாதி சான்று இருப்பதால் அனைவரும் சாதி பார்த்து பள்ளியில் தனித்தனியாக இருக்கின்றனர். இந்த மாதிரி நம் நாட்டில் எங்கேயும் இருக்க கூடாது. இதுதான் முதலும், கடைசியுமாக இருக்க வேண்டும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+