பள்ளியில் சாதி சான்றிதழ் எதுக்கு? பட்ட அவமானங்களால் உடைந்து பேசிய நாங்குநேரி சின்னத்துரை.. கலங்குதே
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இந்த தம்பதியின் மகன் சின்னத்துரை. மகள் பெயர் சந்திரா. இவர்கள் 2 பேரும் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இந்த தம்பதியின் மகன்சின்னத்துரை. மகள் பெயர் சந்திரா. இவர்கள் 2 பேரும் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.

இந்நிலையில் தான் சாதிய வன்கொடுமையால் சக மாணவர்கள் கடந்த ஆண்டு சின்னத்துரையின் வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் வெட்டினர். மேலும் தடுக்க போன சந்திராவையும் வெட்டிவிட்டு ஓடினர். இதனை பார்த்த அதிர்ச்சியில் சின்னத்துரையின் தாத்தா கிருஷ்ணன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. இதையடுத்து அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த சின்னத்துரை, சந்திரா ஆகியோர் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்தனர். இந்த வழக்கில் 6 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிளஸ் 2 படித்தபோது சின்னத்துரைக்கு இந்த கொடூர சம்பவம் நடந்தது. அதன்பிறகு அவர் மீண்டும் பள்ளி படிப்பை தொடங்கினார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக சின்னத்துரை பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், இவரது சகோதரி பாளையங்கோட்டையில் உள்ள மேரி சார்ஜென்ட் பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர். இருவரின் படிப்பு செலவை அரசு ஏற்றது. இந்நிலையில் தான் சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் மாணவர் சின்னத்துரை 600-க்கு 469 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
சின்னத்துரைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். சாதிய வன்கொடுமை தாக்குதல், தொடர் மருத்துவ சிகிச்சைக்கு பிறகும் அவர் தனது தொடர்ந்து படிப்பை கைவிடாமல் இருந்ததை பலரும் பாராட்டினார்கள். நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் சின்னத்துரையை பாராட்டி சான்று மற்றும் உதவித்தொகை வழங்கினர். இந்நிலையில் தான் நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் நாங்குநேரி மாணவன் சின்னத்துரை பங்கேற்று உருக்கமாக பேசினார். அவர் கூறியதாவது:
கடந்த வருடத்தில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். இந்த சம்பவம் நடந்து ஒரு வருடமும் 2 நாட்களும் ஆகிறது. நிறைய கஷ்டங்கள், அவமானங்களை நான் சந்தித்து வந்தேன். ஒவ்வொரு ஊரிலும் சாதி அடையாளத்துடனும், கையில் சாதி கயிறும் கட்டுகின்றனர். இதனால் தான் பள்ளியிலும் சாதி அடையாளங்களுடன் இருக்கின்றனர். பள்ளியில் சாதி சான்றிதழ் எதுக்கு வாங்குறாங்க? என்று தெரியவில்லை. சாதி சான்று இருப்பதால் அனைவரும் சாதி பார்த்து பள்ளியில் தனித்தனியாக இருக்கின்றனர். இந்த மாதிரி நம் நாட்டில் எங்கேயும் இருக்க கூடாது. இதுதான் முதலும், கடைசியுமாக இருக்க வேண்டும்'' என்றார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications