நான் வேணுமா.. இல்லை அவர் போதுமா.. கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து.. இளைஞர் தற்கொலை
கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
நெல்லை: "நான் வேணுமா, உன் புருஷன் வேணுமா" என்று கேட்டு கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இளைஞர் ஒருவர்!
நெல்லை மாவட்டம், அறுமாவட்டம் சீதபற்பநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. 29 வயதாகிறது.. இவர், தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியில் உள்ள ஒரு அலுமினிய கம்பெனியில் வேலை பார்க்கிறார். அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்தவர் பகவதி. பகவதிக்கும் 29 வயது!
பகவதியின் கணவன் பெயர் முருகன்.. 9, 6 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.. ஒரெ இடத்தில் ரமேஷ்பாபுவும், பகவதியும் வேலை பார்க்கவும் நட்பு அதிகமாகி நெருக்கமாக பழக ஆரம்பித்து விட்டனர்.. ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக உருவெடுத்தது. 5 வருடமாக உருகி உருகி காதலித்து வந்துள்ளனர்... விஷயம் முருகனுக்கு தெரிந்து பகவதியை கண்டித்தார்.. ஆனாலும் பகவதி கேட்கவில்லை.

கள்ளக்காதல்
"நீ வேலைக்கெல்லாம் ஒன்னும் போக வேணாம்.. வீட்டில குழந்தைங்களை கவனிச்சிக்கிட்டாலே போதும்" என்று கறாராக முருகன் சொல்லவும்தான் ஒரு மாசமாக வீட்டில் இருந்துள்ளார் பகவதி. ஆனால் பகவதி வேலைக்கு வராததால், போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார் ரமேஷ்பாபு.

ஆத்திரம்
கணவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, போன் பேசுவதையும் பகவதி தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ்பாபு, பகவதியின் வீட்டுக்கே சென்றுவிட்டார். "ஏன் என்னுடன் பேசுவதில்லை.. நான் முக்கியமா, உன் புருஷன் முக்கியமா" என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தீவிர சிகிச்சை
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியால், பகவதியின் கழுத்தை அறுத்துவிட்டு தானும் தப்பி ஓடினார்... பகவதி வலியால் அலறவும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து உயிருக்கு போராடிய பகவதியை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. இதனிடையே தப்பி ஓடிய ரமேஷ்பாபுவை பிடிக்க அந்த பகுதியினர் துரத்தி கொண்டு ஓடினர்.

தற்கொலை
ஆனால் அதற்குள் ரமேஷ்பாபு அதே கத்தியால் தானும் கழுத்தறுத்து கொண்டார். பிறகு இவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு முயல்வதற்குள் அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறி ரமேஷ்பாபு உயிரிழந்தார். இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications