என் மகனை பாம்பு கடிச்சிடுச்சு.. 2 பாம்புகளுடன் மருத்துவமனைக்கு ஓடிய தந்தை - திருவள்ளூரில் ஷாக்!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, தனது மகனை கடித்த கட்டுவிரியன் மற்றும் கண்ணாடி விரியன் ஆகிய பாம்புகளை, சிறுவனின் தந்தை கையோடு எடுத்து வந்ததால், திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
பாம்பு கடித்தால், என்னவாகுமோ? ஏதாகுமோ என்ற அச்சத்துடன் கடிபட்டவருடன், கடித்த பாம்பையும் மருத்துவமனைக்கு கொண்டு வரும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. அப்படியொரு சம்பவம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரங்கேறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கொல்ல குப்பம் கிராமத்தில் வசிப்பவர் மணி. இவரது மனைவி எல்லம்மாள். இந்த தம்பதிக்கு, 7 வயதில் மணி என்ற மகன் உள்ளார். இந்த தம்பதியர், அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

மகனை கடித்த பாம்புகள்
இந்நிலையில், நேற்று வழக்கம்போல பணி முடித்து விட்டு, வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவில் கண்ணாடி விரியன் மற்றும் கட்டுவிரியன் பாம்புகள், அவருடைய மகன் மணியை கடித்துவிட்டு, மகன் மேலேயே படுத்திருந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணி, அந்த இரண்டு பாம்பைகளையும் கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார்.

பாம்புகளுடன் வந்த தந்தை
இதனையடுத்து, அரசு மருத்துவமனைக்கு பாம்பு கடித்த தனது மகனை கொண்டு சென்றுள்ளார். அப்போது, மகனை கடித்த அந்த இரண்டு பாம்புகளையும் கையோடு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மகனை கொண்டு சென்றுள்ளார் மணி.

மேல் சிகிச்சை
திருவள்ளூர் தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும்போதும், மகனை கடித்த இரண்டு பாம்புகளை அவர் எடுத்துச் சென்றுள்ளார். மகனுடன் சிகிச்சைக்கு வந்த தகப்பனார், கையில் பாம்புகளுடன் வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாம்பு கடித்த சிறுவன் மணி, திருவள்ளூர் தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் பரபரப்பு
பாம்பின் விஷத்திற்கு ஏற்ற வகையில் மருந்துகள் தரப்படும் என்பதால், பாம்பு கடித்த தனது மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மகனை கடித்த கட்டுவிரியன் மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகளை கையோடு எடுத்து வந்ததால், திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications