தெருநாய்களால் ஏற்பட்ட சோகம்.. ஆரணி அருகே விபத்தில் சிக்கி 4 வயது குழந்தை பரிதாப பலி!
திருவண்ணாமலை: ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் அனாமிகா என்ற 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்த அந்தச் சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்துள்ளது. தெருநாய்களால் ஏற்பட்ட விபத்தில் சிறுமி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்துவது, தெருநாய்களின் தொல்லைக்கான தீர்வு குறித்து விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் அண்மையில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு தெருநாய்களுக்கு ஆதரவாக பேசியவர்களின் கருத்துகள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில், தெருநாய்களால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (30). இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகள் அனாமிகா (4) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சேத்துப்பட்டு ரோட்டில் உள்ள ஒருவரிடம் குழந்தையை மந்திரிப்பதற்காக கார்த்தி மனைவியுடன் பைக்கில் அழைத்துச்சென்று கொண்டிருந்தார்.
அவர்கள் தச்சூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டு பைக் மீது பாய்ந்தன. இதனால் பைக் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் கார்த்தி, தமிழ்ச்செல்வி, அனாமிகா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அனாமிகா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். கார்த்தி மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஆரணி நகர காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம், உதவி ஆய்வாளர் கணேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெருநாய்கள் தொல்லையால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபகாலமாக தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்து இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் தெருநாய் கடி சம்பவங்களும், தெருநாய்களால் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அச்சம் அடைத்துள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications