எல்லாத்தையும் எடுங்க.. ஸ்டாலின் ஸ்டிரிக்ட்.. திமுக முப்பெரும் விழா பேனர்கள் அதிரடியாக அகற்றம்!
திமுக தலைவர் ஸ்டாலினின் உத்தரவை அடுத்து திருவண்ணாமலை திமுக முப்பெரும் விழாவில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை: திமுக தலைவர் ஸ்டாலினின் உத்தரவை அடுத்து திமுக முப்பெரும் விழாவிற்காக திருவண்ணாமலையில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது.
சென்னையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீயின் மரணம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் பைக்கில் செல்லும் போது மேலே விழுந்து சுபஸ்ரீ விபத்திற்கு உள்ளானார்.
கட் அவுட் முகத்தில் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ, லாரி டயரில் சிக்கி பலியானார். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்து இருக்கிறது. பலர் இதற்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்பி உள்ளனர்.

சிக்கல்
இதையடுத்து திமுக முதல் கட்சியாக, இனிமேல் கட்சி விழாக்கள், கூட்டங்களில் பேனர் வைக்க கூடாது என்று உத்தரவிட்டது. அதேபோல் எந்த விழாக்களில் பேனர் வைக்கிறார்களோ, அந்த விழாக்களில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக கூறினார். அதன்பின் அதிமுக, பாமக, அமமுக கட்சிகளும் இதே நிலைப்பாட்டை எடுத்தது.

ஆனால் என்ன
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிடும் முன் திருவண்ணாமலையில் நடக்க உள்ள திமுகவின் முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலினின் அறிவிப்புக்கு முன்னே அங்கு இந்த விழாவிற்காக பேனர்கள் நிறைய வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் முப்பெரும் விழா இன்று திருவண்ணாமலையில் நடக்கிறது.

சர்ச்சை
இந்த நிலையில் இந்த பேனர் புகைப்படங்கள் இணையம் முழுக்க வெளியாகி பெரிய சர்ச்சையாகி உள்ளது. திமுக தலைவர் அவ்வளவு கண்டிப்பாக கூறியும், திமுகவின் பேனர்கள் வைத்துள்ளனர். என்ன நியாயம் இது. உடனே இதை அகற்ற வேண்டும் என்று பலர் இதற்கு எதிராக இணையத்தில் குரல் கொடுத்தனர்.

ஸ்டாலின் என்ன
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இது தொடர்பாக புகார் சென்றுள்ளது. இதனால் உடனடியாக முப்பெரும் விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர்கள் அனைத்தையும் அகற்றும் படி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் திருவண்ணாமலையில் வைக்கப்பட்டு இருந்த முப்பெரும் விழா பேனர்கள், பேனர் வளைவுகள் எல்லாமும் அகற்றப்பட்டு இருக்கிறது.

எப்படி கொடிகள்
இரவோடு இரவாக அங்கு வைக்கப்பட்டு இருந்த 20க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது. இதனால் பேனர்கள் இல்லாமல் கொடிகள், அலங்கார வளைவுகள் வைத்து ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுக்க திமுகவினர் முடிவு செய்துள்ளனர். தவறுதலாக எங்காவது சிறிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதா என்று திமுகவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்!












Click it and Unblock the Notifications