திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
திருவண்ணாமலை: டிசம்பர் 13 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பிறப்பித்திருந்தார்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கடந்த 4 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் கடைசி நாளான 13 ஆம் தேதி காலை பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும்.

இந்த விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாளை ஈடு கட்ட வரும் 21 ஆம் தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விழாவையொட்டி அந்த மாவட்டத்தில் உள்ள 156 பள்ளிகளுக்கு டிசம்பர் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது விழாவுக்கு பாதுகாப்பு பணிக்காக வரும் காவலர்கள் தங்குவதற்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications