பாலியல் வழக்கு: தலைமறைவான திண்டுக்கல் சுரபி கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் போளூர் கோர்ட்டில் சரண்
திருவண்ணாமலை: நர்சிங் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தப்பி ஓடி தலைமறைவானதால் தேடப்பட்டு வந்த சுரபி கல்லூரிகளின் தாளாளர் ஜோதிமுருகன் திருவண்ணாமலை அருகே போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டி, செம்பட்டி பகுதிகளில் சுரபி போன்ற பெயர்களில் நர்சிங் கல்லூரி உள்ளிட்டவைகளை நடத்தி வருபவர் ஜோதி முருகன். திண்டுக்கல் மாவட்டத்தில் பிரபல தொழிலதிபராவார்.

யார் இந்த ஜோதிமுருகன்?
திரைப்படங்களுக்கு தமது கல்லூரிகளை இலவசமாக படப்பிடிப்புக்கு கொடுத்து அதன் மூலம் படங்களிலும் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டிக் கொள்பவர் ஜோதிமுருகன். ஒருசில திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறார் ஜோதிமுருகன்.

மாணவர்கள் போராட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஜோதிமுருகன் மீது அவரது நர்சிங் கல்லூரி மாணவிகள் பாலியல் தொல்லை புகார் கொடுத்து சாலை மறியல் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் ஜோதிமுருகனை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

சரணடைந்த ஜோதிமுருகன்
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஜோதி முருகனுக்கு உடந்தையாக இருந்ததாக விடுதி காப்பாளர் அர்ச்சனா கைது செய்யப்பட்டார். ஆனால் ஜோதிமுருகன் தப்பி ஓடி தலைமறைவானார். ஜோதிமுருகனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ஜோதிமுருகன், திருவண்ணாமலை அருகே போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

சுரபி கல்லூரியை அரசு ஏற்க வேண்டும்
தற்போது திண்டுக்கல் சுரபி கல்லூரிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுரபி கல்லூரியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்துவதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications