ஆரணியில் பரிதாபம்...கார் டயர் வெடித்து லாரி மீது மோதல்...குல தெய்வம் கோயிலுக்கு சென்ற 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: போளூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான விவரம் பின்வருமாறு:-

Six people including a child killed in road accident in tamilnadu

வேலுார் மாவட்டம் விருபாட்சிபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த10 பேர் காரில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த புதுார் கிராமத்தில் உள்ள குல தெய்வ கோவிலிற்கு சென்று கொண்டிருந்தனர். இன்று பிற்பகல் வேலுார் - திருவண்ணாமலை சாலையில், சந்தவாசல் அடுத்த முனியந்தாங்கல் கூட்ரோடு அருகே கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது திருவண்ணாமலையிலிருந்து வேலுார் நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக திடீரென கார் மீது மோதியது. லாரி மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் காரில் பயணம் செய்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் காரில் பயணம் செய்த 3 மாத குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த நான்கு பேர், சிகிச்சைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+