தமிழகத்தில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்... அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்..!
திருவாரூர்: தமிழகத்தில் புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமாகியுள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறையுடன் வேளாண் துறையையும் அவர் கூடுதலாக கவனித்து வரும் சூழலில் திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு இந்த தகவலை கூறியுள்ளார்.

மேலும், புயல் சேத நிவாரணத் தொகையை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப்பெற்று விவசாயிகளுக்கு முதலமைச்சர் வழங்குவார் என்றும் இது குறித்து ஸ்டாலினுக்கு தாம் எந்த விளக்கமும் அளிக்கத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
நிவர் புயல் மற்றும் புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான கணக்கெடுப்புக்குப் பிறகு இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இதனிடையே டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினர் நேற்று சென்னையில் ஆய்வு செய்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தை பார்வையிட்டனர். அவர்கள் டெல்லி திரும்பிய பிறகு மத்திய அரசிடம் அளிக்கும் அறிக்கையை பொறுத்து தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications