பாஜகவின் பாணி சர்வாதிகாரமே.. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது.. முதல்வர் ஸ்டாலின்
திருவாரூர்: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சியே இருக்காது. பாஜகவின் பாணி சர்வாதிகாரம்தான் என்று திருவாரூரில் இன்று மாலை நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதில் இருந்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்களை பெரும்பாலான கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக பிரச்சாரங்களை கட்சிகள் தொடங்கியுள்ளன.

அந்த வகையில், திமுக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இன்று திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சியே இருக்காது. பாஜகவின் பாணி சர்வாதிகாரம்தான். ஜனநாயகத்திற்கு விரோதமான அத்தனை செயல்களையும் செய்துவிட்டு பாஜக ஆடும் ஆட்டம் தான் அழுகுணி ஆட்டம். இந்தியாவை எல்லா வகையிலும் மிக மோசமாக பாழ்படுத்தியது பாஜக. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பிரசாரம் செய்ய முடியாத அளவுக்கு எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்கிறது பாஜக.
ஆட்சியில் இருந்த போது எதுவுமே செய்யாத பழனிசாமி, தமிழ்நாட்டில் எந்த நன்மையும் செய்யாமல் துரோகங்களை மட்டுமே செய்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி தனது பங்குக்கு ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தேர்தல் அறிக்கை அல்ல.. பழனிசாமியின் பம்மாத்து அறிக்கை. அவர்கிட்ட அதிகாரம் இருந்த போது மத்திய அரசிடம் இருந்து எதையாவது பெற்று வந்தாரா...
உதவாக்கரையாக இருந்த பழனிசாமி என்ன சொன்னார் தெரியுமா? ஆளுநரை நியமிக்கும் போது முதல்வரின் ஆலோசனை பெற்று நியமனம் செய்ய வேண்டுமாம்... திமுகவின் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக அரசுக்கு குடைச்சல் கொடுத்து கொண்டே இருக்கிறாரே ஆளுநர்.. அவரை கண்டித்து ஒரு அறிக்கையாவது விட்டு இருக்கிறீர்களா... தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி மக்கள் பணிகளை எந்த தொய்வு இன்றி செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications