கஜா நிவாரணம்.. தவ்ஹீத் ஜமாஅத் ரூ. 3 லட்சம் உதவி
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் நிவாரண உதவிகளை அனுப்பி வருகின்றார்கள். பல அமைப்பினர் களத்தில் நின்று நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள அரிசி,மேகி,எண்ணெய், டீ தூள், பிஸ்கட் போன்ற சமையல் பொருட்கள், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பேக்கை முத்துப்பேட்டை, அதிராம்பட்டிணம், தொக்களிக்காடு, மகிலான் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் நேரடியாக மக்களிடம் வழங்கினர்.












Click it and Unblock the Notifications